பதிப்பாசிரியர் உரை |
xxxv |
வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையர் முதலானோர். |
தனித்தமிழ் எழுச்சி |
தனித்தமிழுக்கு வித்திட்டவர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி. தம் பெயரைப்
பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். அவரிடத்தில் வந்த சுவாமி வேதாசலம்
பரிதிமாற் கலைஞர் ஊன்றிய வித்துக்கு நீரூற்றி வளர்த்தார். |
"பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்" |
(அருட்பா) |
இப் பாடல் இராமலிங்க அடிகள் பாடிய திருவருட் பாவிலுள்ளது. "நீலா! இப் பாட்டில்
தேகம் என்னும் வடசொல்லை நீக்கி யாக்கை என்னும் தென்சொல்லை யமைத்திருந்தால்
எத்துணை இன்னோசையாகவும் தூய தமிழாகவும் இருக்கும்! இங்ஙனம் அயற்சொற்களை ஆள்வதனால்,
இன்னோசையும் தூய்மையும் கெடுவதுடன் நாளடைவில் தமிழ்ச்சொற்களும் ஒவ்வொன்றாக
வழக்கொழிந்து போகின்றனவே" என்று மகளிடம் கூறி வருந்த, அம் மகளும் "அப்பா!
அப்படியானால் இனிமேல் நாம் தனித் தமிழிலேயே பேசுவோம்" என்று தம் ஆர்வத்தைத்
தெரிவித்தார். அடிகள் அதனை மெச்சி அன்றே சுவாமி வேதாசலம் என்னும் தம் பெயரை
மறைலையடிகள் என்று மாற்றி, அன்று முதல் தனித்தமிழிலேயே பேசவும் எழுதவும் தலைப்பட்டார்.
மறைமலையடிகள் தாம் வெளியிட்ட ஞானசாகரம் இதழை அறிவுக்கடல் என்று
மாற்றினார்; தாம் எழுதிய நூல்கள் மறுபதிப்புக் கண்டபோது வடசொற்களை மாற்றித்
தக்க தமிழ்ச்சொற்களைப் பெய்து வெளியிட்டார்; இந்தியெதிர்ப்புப் போரிலும்
தலைமைதாங்கி வழிகாட்டினார். |
தனித்தமிழ் எழுச்சி தமிழகம் முழுவதும் வீறுகொண்டு எழுந்தது. பலர் தம் பெயர்களைத்
தனித்தமிழாக மாற்றிக்கொண்டனர். சிலர் மாற்றிக் கொண்ட பெயரும் தமிழாக
இல்லை. ஒருசிலர் தமிழுக்காகப் போராடினர். ஆனால் தம் பெயரைத் தமிழாக
மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. |
தனித்தமிழ் இதழ்கள் |
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழம், மீட்போலை, தமிழியக்கம்,
செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், குறளியம் போன்ற இதழ்கள் தனித்தமிழ்
பரப்பி வருகின்றன. |
நூலாசிரியர் பாவாணர் |
பாவாணர் பாட்டனார் முத்துச்சாமித் தேவர் தஞ்சை
மாவட்டத்து நீடாமங்கலத்தைச் சேர்ந்தவர்; சங்கரன்கோவிலில் இருந்த தோக்கசு என்னும் |