முகப்பு | தொடக்கம் |
vii |
இதனை மேலும் புதுக்கித் தமிழ்ப் பேரகராதியை 1901-ல் இவர் மீண்டும் வெளியிட்டார் . 1905-ல் இரண்டாம் பதிப்பும் வந்துள்ளது .
தமிழ்மொழி யகராதி: தமிழ்ப் பேரகராதியை 1901-ல் வெளியிட்ட பி. வே. நமசிவாய முதலியார் காஞ்சி நாகலிங்க முதலியாரைக்கொண்டு மேலும் பல சொற்களை இணைத்துத் திருத்தியும் விளக்கியும் பேரகராதியை வளப்படுத்தினார் . 1911-ல் வெளிவந்த இந்த அகராதிக்கு நாகலிங்க முதலியாரின் விருப்பப்படி ' தமிழ்மொழியகராதி ' எனப் பெயரை மாற்றினார் . மேன்மைதங்கிய ஐந்தாம் சார்ச்சு மன்னரும் மேரி அரசியாரும் அந்த ஆண்டு தில்லியில் முடிசூடிக்கொண்ட நிகழ்ச்சியை நினைவுகூரும் வண்ணம் ' காரனேசன் தமிழ் டிக்சனரி ' என்னும் பெயரிட்டார் . இந்த அகராதிக்கு வரவேற்பு மிகுதியும் இருந்தது . எனவே , இது மேலும் பல பதிப்புகளை அடுத்தடுத்துப் பெற்றது . இதன் ஏழாம் பதிப்பு 1935-ல் வெளிவந்ததாகத் தெரியவருகிறது . இதன் ஆறாம் பதிப்பை அப்படியே நிழற்படம் எடுத்து மறுதோன்றிப் பதிப்பாகத் தில்லி , ஆசியன் பதிப்பகத்தார் நான்காண்டுகளுக்கு முன் (1980) வெளியிட்டுள்ளனர். இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி:
பி.
இராமநாதன் என்பார் புலவர் சிலர் துணையுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகராதி என்னும் பெயரிலே 1909-ல் இருபகுதிகள் கொண்டபேரகராதியை வெளியிட்டுள்ளார். இது
நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ்ப் பேரகராதி முதலிய முந்திய அகராதிகளில் இடம்பெறாத 10,000 சொற்களை மிகுதியாகக் கொண்டுள்ளது. சதுரகராதிக்குப் பின்னர் வந்த தமிழ் - தமிழ் அகரமுதலிகளில்
நா. கதிரைவேற்பிள்ளை அகராதி வரையில் சதுரகராதியில் உள்ளபடி பொருள், தமிழ்ச்சங்க அகராதி: தமிழ் - தமிழ் அகரமுதலிகளுள் மிகவும் பெரியது தமிழ்ச்சங்க அகராதி . இது மூன்று பெருந்தொகுதிகளாக வெளிவந்தள்ளது . சொற்பொருள் விளக்கம் தவிரப் பொருள் , தொகை , தொடை அகராதி என்னும் சேர்க்கை இந்த அகராதியில் இல்லை . இந்த அகராதியைப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கியவர் யாழ்ப்பாணம் நீதிபதி கு. கதிரைவேற்பிள்ளையாவார் . இவர் சதுரகராதி , மானிப்பாய் அகராதி , சென்னை அகராதிகள் , வின்சுலோ அகராதி , வைத்திய அகராதி என்னும் இவற்றில் இல்லாத புதுச் சொற்களைத் திரட்டி விளக்கம் தந்துள்ளார் . இதனை முற்றுமாய் வெளியிடும் முன்னர் இவர் காலமானார் . பின்னர் அப்பொழுது மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவராக விளங்கிய பொன் . பாண்டித்துரைத் தேவரவர்கள் அகராதிப் படிவங்களைக் கதிரைவேற்பிள்ளையின் குமாரர் பாலசிங்கம் என்பவரிடமிருந்து பெற்றார் ; மதுரைத் தமிழ்ச்சங்க வித்துவான்களைக் கொண்டு பரிசோதித்து அச்சிட்டு வெளியிடப் பணித்தார் . சே.ரா . சுப்பிரமணியக் கவிராயர் முதலிய பலரும் பல்லாண்டுகள் உழைத்து இந்த அகராதியை மூன்று பகுதிகளாக 1910,1912,1923 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டு முற்றுவித்தனர் . நீதிபதி கு . கதிரைவேற்பிள்ளை சூட்டிய ' தமிழ்ச் சொல்லகராதி ' என்னும் பெயருடன் இந்த அகரமுதலி வெளிவந்த போதிலும் மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்டமையால் ' தமிழ்ச்சங்க அகராதி ' எனக் குறிப்பதே பெருவழக்காயிற்று . ஒருசொற் பல்பொருள்களுக்கு விளக்கம் தரும்போது பொருள்களை 1, 2 என எண் குறியிட்டுக் காட்டியிருப்பது புதுமை . இதனால் ஒரு சொல்லுக்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதும் தெளிவுபடுகிறது . மேலும் , சொற்பொருளுக்கு அடிப்படை ஆதாரமான |