ஒருபொருள் தரும் சொல்வடிவங்கள் அகரவரிசையில் அடுத்தடுத்து வரும்பொழுது இணைப்பு வளைவுக் குறியீட்டால் சேர்த்துக்காட்டி, அவற்றிற்கு ஒருசேரப் பொருள்விளக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
(எ - டு)
அக்காரடலை, |
} |
சருக்கரைப்பொங்கல். |
அக்காரவடிசில் |
ஆலமர்கடவுள், |
} |
கல்லால மரத்தின்கீழ்த் தென்முகக் கடவுளாய் வீற்றிருக்கும் சிவன். |
ஆலமர்செல்வன் |
இடக்கரடக்கல், |
} |
பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக்கூறல். |
இடக்கரடக்கு |
உயிரளபு, |
} |
தனக்குரிய மாத்திரையின் மிக்கொலிக்கும் நெட்டுயிரெழுத்து. |
உயிரளபெடை |
ஒருபொருள் குறித்த வடிவ வேறுபாடுடைய சொற்கள் அகரவரிசை
முறையில் வெவ்வேறிடங்களில் அமைதல் இயல்பு. இவ்வகையான பொருள் தொடர்புடைய சொற்களுள் முதல் மூலச்சொல்லுக்கு மட்டும் பொருள் தரப்பட்டிருக்கும் . ஏனைய மாற்று
வடிவங்களைத் தரும்போது அவற்றின் பொருளுக்கு முதற்சொல்லைக் 'காண்க' என்று
குறிப்பிடப்பட்டிருக்கும்.
(எ-டு)
அச்சாரம் |
காண்க |
அச்சகாரம். |
அல்லம் |
காண்க |
இஞ்சி. |
ஆட்டாங்கள்ளி |
காண்க |
திருகுகள்ளி. |
உருவங்காட்டி |
காண்க |
உருக்காட்டி. |
ஓரெழுத்தால் வடிவம் வேறுபடும் ஒருபொருள் குறித்த சொற்கள் வரும்போது அகர வரிசையில் மாற்றெழுத்து வளைவுக்குறிக்குள் தரப்பட்டிருக்கும். இதனால் வேற்றெழுத்து மாற்றமுடைய தனி வடிவத்தைச் சுருக்கிக் காட்டும் தன்மை காணப்படுகிறது.
(எ-டு)
அங்கி(கீ)காரம், |
அடைக்கலக்(ங்)குருவி, |
அமிர்(ழ்)து, |
காண்டி(டீ)ப(வ)ம் |
போல்வன காண்க. இதனால் அடுத்தடுத்து ஓரெழுத்து மாற்றச் சொல்வடிவம் தரப்படுதல் தவிர்க்கப்படுகிறது. 'காண்க;' என்று அடுத்தடுத்து எடுத்துக்காட்டும் நிலைமையும் தவிர்க்கப்படுகிறது.
இந்தத் தளத்தில் இவை இருவேறு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன. (எ-டு)
அங்கி(கீ)காரம்இது அங்கிகாரம் அங்கீகாரம் | என இரு சொற்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
பொருள் உரைக்குமிடத்து ஒரு தலைச்சொல் குறைச்சொல்லாயின அதன் முழுவடிவமும் முதலில் தந்து, பின் பொருள் விளக்கப்பட்டிருத்தலும் உண்டு. (எ-டு)
அக்களிப்பு - அகக்களிப்பு, மனமகிழ்ச்சி. ஆண் பெண் வேறுபாட்டை விளக்கிக்காட்ட அவ்விருபால் விகுதிகளும் உடன் இட்டுக்காட்டப்பெறுகின்றன. (எ-டு) செருக்குள்ளவன்(ள்). வினைச்சொற்கள் ஏனைய அகராதிகளிற்போலத் தொழிற்பெயர் வடிவிலேயே தரப்பட்டிருக்கின்றன. வினையடியாய் வரும் ஒரு சொல்லும் அதே வடிவமுடைய பெயரும்
தனித்தனி சொற்களாகக் காட்டப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அடி என்பது பாதம், காற்சுவடு, முதல், கடவுள் என்று இவ்வாறு பலபொருள் தரும் பெயர்ச்சொல் . இப்
பெயர்ச்சொல்லை அடுத்து அடி என்னும் வினைப்பகுதித் தலைச்சொல் வரும்போது சொல்லின்பின் (வி) என்பது வினை என்பதனைக் குறிப்பதற்காக வளைவுக் குறிக்குள் தந்து
இனம்பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. |