பக்கம் எண் :
 
தமிழ்நெறி விளக்கம் 8


 
15.தழீஇக் கோடலுந் தழையேற் பித்தலும்
கையுறை யெதிர்ந்தமை மெய்பெற விசைத்தலும்
விரும்பிட முரைத்தலுங் குறியொடு நீங்கலும்
புனைந்து நிலையலு நிலைமை கூறலும்
பாங்கிகொண் டிகத்தலும் பகற்குறி யாகும்.

     (எ-து.) தோழியிற்  கூட்டத்துப்    பகற்குறியாகுமாறு   உணர்த்துதல்
நுதலிற்று.

     (இ-ள்.) பாங்கியை உணர்ந்தது முதலாகக் கொண்டு பெயர்ந்த தீறாகச்"
சொல்லப் பட்டன வெல்லாம் தோழியினாகிய பகற்குறிக் கூட்டமா மென்றவாறு.
1. “நோக்கினும் பிறர்முக நோக்காள் சாரினும்
பூக்குழன் மடந்தை தோள்சா ரும்மே
அன்ன தலையளி யுடமையின்
இன்னுயிர்த் தோழியிவ் வேந்திழை யிவட்கே”    (20)
                    (
நம்பி. 133, மேற்; களவியற்.. 25, மேற்.)

     என்பது பாங்கியை உணர்ந்தது.
2.“1புனையிழை யாயமொடு பூம்பந் தெறியவும்
2நனைமலர் ஞாழ லொள்வீ கொய்யவும்
வருந்தினள் கொல்லோ மடந்தை
பரந்தன்று மாதோ பண்புகெழு நிறனே”(21)
                               (களவியற்.. 31, மேற்.)

     என்பது வேறுபாடு கண்டு பாங்கி ஐயுற்றது.
3.“கண்ணி தகைசிறந் தனவே தண்ணென்
பூந்தழை செவ்விய போலும் வாங்கிருங்
கூந்தலு மல்குலும் பொலிய
ஏந்தினிர் கொண்மின்யாம் விழைகுவம் பெரிதே”   (22)
                      (
நம்பி 144, மேற்; களவியற்.. 29 மேற்.)
    
என்பது தலைமகன் இரந்து குறையுற்றது.


     1. ‘பந்துவழிப் படர்குவ ளாயினு நொந்துநனி, வெம்பும் னளியன்”
(அகநா. 153:3. 4)
     2. “கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்” (அகநா. 216: 8)