பக்கம் எண் :
 
2சிதம்பரப்பாட்டியல்

நூல்.

1-வது உறுப்பியல்.
 

1.

பூமேவு திசைமுகனுஞ் செங்கணெடு மாலும்
   புத்தேளிர் கணங்களுமா தவத்தோரும் போற்றத்
தேமேவு குழலுமையாள் கண்டுவப்ப மன்றிற்
   றிருநடஞ்செய் பேரொளியைச் சிந்தைதனில் வைத்துக்
காமேவு கிளியென்னக் கொழுஞ்செழுந்தே னென்னக்
   கடலமுத மென்னமிளிர் கனித்துவர்வாய் மாதே
பாமேவு தமிழ்ப்பொதியக் குறுமுனிவன் கூறும்
   பாட்டியலைச் சுருக்கமதாய்ப் பகர்ந்திடுவன் யானே.
 

2.

யாப்புவிதி யெழுத்தசைசீர் பந்தமடி தொடைபா
   வினமிவையிற் குறினெடிலொற் றுயிர்மெயுயி ராய்தம்
கோப்புடைக்குற் றுகரங்குற் றிகரமையௌ காரக்
   குறுக்கமே வல்லினமெல் லினமொடிடை யினமே
நீப்பரிய வுயிரளபொற் றளபசையி னெழுத்தாம்
   நெடில்குறில்க டனித்துமொற்றை யடுத்தும்வரி னேராம்
சாய்ப்பரிய குறிலிணைகள் குறினெடில்க டனித்துந்
   தமதுடனொற் றடுத்தும்வரி னிரையசையு மாமே.
 

‘பூமேவு.... பகர்ந்திடுவன்யான்’ என்றது  வணக்கம்;  “வணக்க மதிகார
மென்றிரண்டுஞ் சொல்லச், சிறப்பென்னும் பாயிர மாம்.”

‘யாப்பு     விதி...எழுத்தாம்’ என்றது, யாப்பினதுவிதி எழுத்து முதல்
எட்டாம்     என்றவாறு.     அவற்றுள்;    எழுத்தாவன:-குறிலெனவும்
நெடிலெனவும்    மெய்யெனவும்   உயிர்மெய்யெனவும்   உயிரெனவும்
ஆய்தமெனவும்     குற்றிய    லுகரமெனவும்    குற்றியலிகரமெனவும்
ஐகாரக்குறுக்கமெனவும்   ஒளகாரக்குறுக்கமெனவும்    வல்லினமெனவும்
மெல்லினமெனவும்     இடையினமெனவும்     உயிரளபெடையெனவும்
ஒற்றளபெடையெனவும்  வரும்.  இவற்றுள்; குறிலாவன: -அ இ உ எ ஒ
என  ஐந்தாம்;  நெடிலாவன:-  ஆ  ஈ  ஊ  ஏ ஐ ஓ ஒள என ஏழாம்;
மெய்யாவன:-  க  ங  ச  ஞ  ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
எனப்பதினெட்டாம். உயிர்மெய்யாவன:- இவற்றின்மேல் உயிர் ஏறியவை;
க  கா  கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ எனவரும். இப்படியே,
பதினெட்டொற்றின்         மேலும்        பன்னீருயிரும்       ஏற,
இருநூற்றொருபத்தாறெழுத்தாம்.  உயிராவன:- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ
ஐ ஒ ஓ ஒள எனப்