|
1.பொருத்தவியல்
|
|
|
|
முதன்மொழிப்
பொருத்தம்
|
|
|
1. |
மங்கலஞ்
சொல்லெழுத் தெண்ணிய தானம் வருமிருபாற்
பொங்கிய வுண்டி வருணம் பகுத்திடு நாட்பொருத்தம்
தங்கிய நாற்கதி யெண்கண மென்று தமிழ்தெரிந்தோர்
இங்கிவை பத்தும் முதன்மொழி யாமென் 1றியம்புவரே. |
(உரை
I). எ-து, சூத்திரம்; எ-ன், மங்கலம் முதல் கணம் ஈறாகக்
கிடந்த பத்தும் முதன்மொழி யென்பது உணர்த்......று. அவைதாம் மங்கலம்,
சொல், எழுத்து, தானம், பால், உணவு, வருணம், நாள், கதி, கணம் என
இவை பத்தும் எ - று.
(உரை II). ஒருவன்
ஒரு பிரபந்தம் பாடுமிடத்து மங்கலம்......கணம்
என்று சொல்லப்பட்ட பத்துவகைப் பொருத்தமும் பிரபந்த முதற்சீர்க்கண்
உண்டாக்க வேண்டுமென்று சொல்லுவர்.
(கு - ரை.).
இருபால் : ஆண் பெண் அலி எனப் பால் மூன்றாக
(சூ. 7) இருக்க இங்கே இருபால் என்றது முதன்மொழிப் பொருத்தத்துக்கு
ஏற்ற ஆண் பெண் பால்களை நினைத்தென்க. பொருத்தமென்பதை
இடைநிலை விளக்காகக் கொண்டு மங்கலம் முதலிய ஏனை ஒன்பதனோடுங்
கூட்டுக. நாற்கதி ; சூ, 20, 21. எண்கணம் - எட்டுக்கணம் ; 22-3. (1)
(பி - ம்.)
1 றியம்பினரே
|
மங்கலப்
பொருத்தம்
|
|
|
2. |
திருமணி
பூத்திங்க ளாரணஞ் சொற்சீர் எழுத்துப்பொன்றேர்
வருபுனல் கார்புயல் மாநிலங் கங்கை மலையுலகம்
பரிகடல் யானை பருதி யமுதம் புகழ்முதற்சீர்க்
குரியநன் மங்கலம் சொல்லென்று நாவலர் ஓதினரே. |
(உரை
I). எ - ன், திரு, மணி, பூ, திங்கள், ஆரணம், சொல், சீர், எழுத்து,
பொன், தேர், புனல், கார், புயல், நிலம், கங்கை, மலை, உலகம், பரி, கடல், ஆனை,
பருதி, அமுதம், புகழ் ஆக இருபத்துமூன்று மங்கலச் சொல் முதற்சீருக்கு வைக்கலாம்.
|