(கு
- ரை.) மகயிரம் - மிருகசீரிடம். மேற் சூத்திரங்களில் மொழிக்கு
முதலாகும் எழுத்துக்களுக்கே நாள் கூறினார். (18)
|
நாட்பொருத்தம்
|
|
|
19. |
மொழிந்தவந்
நாட்களை மூவொன்ப தாக்கி
அவற்றின்முன்னர்
இழிந்தன வொன்றுமூன் றைந்தே
ழிரண்டுநாலாறெட்டொன்பான்
அழிந்தன வல்லன வட்டம ராசிவை நாசிகமும்
கழிந்தன நின்றன தாமியல் பாகக் கருதுவரே. |
(உரை
I). எ-ன், வகுத்த நாட்களைத்தொகுத்துப் பொருத்தம்
கொள்ளுமாறு உணர்த்..........று.
பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரெழுத்து நாளே தொடங்கி
முதற்கண்
எடுத்த மங்கலச் சொல் முதலெழுத்து நாள் அளவும் வர எண்ணி இவை
கொள்ளப்படும்எ - று.
பாட்டுடைத் தலைமகன் இயற்பெயரெழுத்து நாள் முதல்
மங்கலச்
சொல்லெழுத்து நாளளவும் எண்ணினால் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகா.
இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, ஒன்பது நன்றாம். இப்படி ஒன்பது ஒன்பதாகக்
கழித்துப் பார்த்துக்கொள்வதன்றியும், பாட்டுடைத் தலைமகன்
இயற்பெயரெழுத்து நாள் ராசிக்கு மங்கலச் சொல்லின் நாள் ராசி எட்டாம்
ராசியாய் வரின், அவை மங்கலமாக வைக்கலாகாது. அன்றியும், பாட்டுடைத்
தலைமகன் இயற்பெயரெழுத்து நாளின்கால் தொடங்கி மங்கலச் சொல்லின்
நாளின் காலளவும் எண்ணினால் எண்பத்தெட்டாங்கால் வரின் அவை
வைநாசிகம் என்றறிக. அதுவும் மங்கலச் சொல்லுக்கு
ஆகாது எ - று.
(உரை II).
எ - து; இக்கவிக்கு முன் கூறிய ஆறு கவியினாலும்
சொல்லப்பட்டபடியே நாம நட்சத்திரம்
ஆராய்ந்தறிந்துகொள்க.....................பத்தாம்
நாள் ஆகில் அனுசேனம்
என்று தள்ளப்படும். இப்படிப் பொருந்தப்பட்ட மங்கலச்சொல்
வைத்துக்கொள்க. இது நாட்பொருத்தம்.
|