பக்கம் எண் :
 

18நவநீதப் பாட்டியல்

     ஒருவர்மேற் பாடும் பிரபந்தத்துக்கு இந்தப் பத்துவகைப் பொருத்தமும்
நன்றாக ஆராய்ந்து பார்த்து முதற்சீர் மங்கல மொழியில் வைத்துப் பாடுக.

     (கு - ரை.) இயமானன் - இந்திரகணம் ; இதனைத் துறக்கமென்றும்
இயமானனென்றும் கூறுவர் ; வெண்பாப். 1. 20, உரை. கருவிளங்காய் -
அந்தரகணம். தேமாங்கனி - மாருதகணம். புளிமாங்கனி - அக்கினிகணம்.
கூவிளங்காய் - சூரியகணம்.

     (பி - ம்.) 1 ‘வாக’ 2 ‘பரிதி’ 3 ‘நீக்குவரே’ (23)

தசாங்கம்
   
24. +மலையாறு நாடூர் மலர்த்தார் வயப்பரி வார்மதத்த
கொலையார் களிறு கொடிமுர சாணை குலவுபத்தும்
தலையான நூலோர் தசாங்கம தென்ப தமதயலே
கொலையான சொற்பொரு டோன்றிடி லானந்தம் கூறுவரே.

     (உரை I). எ - ன், தசாங்கம் இவையென்றும், அவற்றின் அயற்கண்
நிற்கத் தகாதன இவையென்றும் உணர்த்......று.

     மலை............ஆணை இவை பத்தும் தசாங்கமாவன. இவை ஒரு
குரிசிற்குரிய பொருள். தன்னைப் பரிசிலன் பரவுங்கால் அவற்றின் அயல்
கொலை முதலாகிய கொடுமைச் சொல்லும் பொருளும் அடுத்துக் கூறில்
ஆனந்தம் எ - று.

     இவை இலக்கணம் இனமாகப் பாடும் அவையிற்றுக்கு இயல்பல்ல;
அல்லாதவையிற்றுக்கு ஆமென்று கொள்க. (24)

     ‘இனி யொரு பிரபந்தம் பாடுமிடத்துத் தசாங்க வருணனையும்
பாடவேண்டும். அது வருமாறு ’ (உரை II).

25. உன்னுந் தசாங்க மொருசீ ரதனு ளுரைப்பதன்றிப்
பின்னின்ற சீரொடு சேர்ந்து பிளவு படிற்பிழையாம்
இன்னும் மவைதாம் புணர்மொழி யாயின் இயல்புபெறும்
மின்னும் வெளியுந் துடியு நிகரிடை மெல்லியலே.
 

(உரை I). எ - ன், தசாங்கங்கட்கு எய்தியதோர் நன்மை உணர்த்........று.