பக்கம் எண் :
 

பொது மொழியியல் 19

     மன்னர் இயற்பெயருக்குத் தசாங்கம் ஒரு சீரினுள் உரைப்பரென்பது :
“பிளந்து சீரிற் பெய்யினும் வரையார், புணர்ந்தே மொழிவ ராதலாலே.”
பாட்டுடைத் தலைமகன்றன் தசாங்கமாகிய பத்தும் ஒரு சீர்க்கண் அல்லது
அறுபடுமாயின் அவை குற்றமாம். அவையே புணர்மொழிப் பெயராயின்
மொழியிறுதிச்சீர் நிற்கப் புணர்ப்பினும் குற்ற மாகாது எ - று.

     (உரை II). தசாங்கமென்று சொல்லப்பட்ட மலை......ஆணை என்னும்
பத்துச் சொல்லும் பிரபந்தச் சாயையில் வைத்துப் பாடுமிடத்து ஒவ்வொன்று
ஒவ்வொரு சீரிலேயே வைத்துப் பாடுவது உத்தமமாம். இப்படி அமையாமல்
இரண்டு சீரோடு கூடிப் பிளவுபட்டு வரிற் குற்றமாம் எ - று.

     (கு - ரை.) இதுவும் முன் சூத்திரமும் உரை Iல் முறையே 24, 8 ஆம்
சூத்திரங்களாகக் காணப்படுகின்றன. அவ்வுரையில் ‘உன்னுந்தசாங்க’ (சூ. 25)
என்றதனோடு பொருத்தவியல் முற்றுப் பெற்றுள்ளது. இயலின் ஈற்றில்
உரையாசிரியர், ‘இவ்வோத்து முதன் மொழிக்கண் வருவனவை யிற்றுக்கு
இலக்கணம் ஆராய்தலின் முதன்மொழி யோத்தென்னும் பெயர்த்து ; இதனுள்
தசாங்க வியலும் ஆராய்ந்த தென்னையோ வெனின், முதன் மொழி வந்த
வாற்றானே பெயர் பெறுதல், நூல் நெறியாய்ப் பொதுச் சொற்றலைமையானும்
பேர் பெறுதலுந் தக்கதெனக் கொள்க’ என்று குறித்துள்ளார்.(25)

பொருத்தவியல் முற்றும்.

ஆகக் காரிகை 28.