|
இதுவுமது
|
|
|
27. |
+விரிசடைப்
பிஞ்ஞகன் வேய்த்தோ ளெழுவர்முன்
காக்கவென்ன
அருள்பெறக் கூறி னவரவர் செய்யும் கொலையகற்றி
உரியநற் கங்கை யுமையாள் மதியூர் விடைகடுக்கை
விரைமலர் தார்மற்று மங்கல மாக விளம்பினரே. |
(உரை
I). எ - ன், இதுவும் காப்பு முதலே இருக்கும் கடவுளர்
ஆமாறுணர்த்...........று.
(இ - ள்.)
செஞ்சடைப் பிஞ்ஞகனையும் எழுவர் மாதர்களையும்
காப்புக்கு முதலாக்காது, கொலையும் கூறாது, கங்கையையும் உமாதேவியையும்
மதியையும் (விடையையும்) கொன்றையையும் குலவ எடுத்து மங்கலமாகக்
கூறுதல் வேண்டும் எ - று.
(கு - ரை) எழுவர்
- சத்தமாதர் ; அபிராமி, நாராயணி, இந்திராணி,
கௌமாரி. வாராகி, துர்க்கை, காளி என்பார். காப்புக்கு முதலெடுக்குங் கடவுள்
திருமால் என்று முன்பு குறித்தலால், இங்கே செஞ்சடைப் ............ காப்புக்கு
முதலாக்காது என்றார்.(2)
|
இதுவுமது
|
|
|
28. |
பதினொரு
மூவரும் பங்கயத் தோனும் பகவதியும்
நிதிமுத லோனும் 1பருதியுஞ் சாத்தனும் 2நீளமரர்க்
கதிபதி தானு மறுமுகத் தைங்கரத் தற்புதனும்
மதிபுனை வேணி வடுகனுங் காவல்செய் வானவரே. |
(உரை I). எ - ன், வகுத்த காப்புக்குரிய வானவரைத்
தொகுத்துணர்த்............று.
(உரை II).
எ - து; பிள்ளைத் தமிழென்னும் பிரபந்தத்துக்கு
முகவுரைக் காப்புக்கு வைக்கும் தேவர்களை உணர்த்...........று.
பதினொரு மூவர் என்றது ஏகாதச ருத்திரரையும்,
பன்னிரண்டாதித்தரையும், அட்ட வசுக்களையும், மருத்துவர் இருவரையும்.
பங்கயத்தோனும் பகவதியும் என்பது திருமாலுந் திக்கமலத்து உதிக்கப்பட்ட
பிரமனையும், பாலைநிலத்துக்குத் தலைவியாகிய பகவதியையும். எண்ணிதிக்கு
முதல்வனாகிய
|