பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 53

     (உரை I). (இ - ள்). ஆன்றோர் விரும்பும் சுவையும் பாவவிகற்பமும்
என்னும் அலங்கார முடைத்தாய்ப் பாக்களாற்றான் இனங்களாற்றான்
உரையோடு பாடை விரவித் தான் வருவது சருக்க மிலம்பகம் பரிச்சேத
மென்னும் கூறுபாட்டையுடைத்தாய் ஒரு பெயரும் தெரியவரும்
பெருங்காப்பியம் எ - று.

     (கு - ரை).
சருக்கம் முதலியன நூலின் பிரிவுகள் : காண்டம் படலம்
முதலியனவும் கொள்ளுக.

     (பி - ம்.) 1 ‘விளக்க’ (39)


காப்பிய இலக்கணத்துக்குப் புறநடை
   
65. நெறியறிந் தவ்வா றியற்றிய வாறு 1நிலைநிற்றலும்
2பெறும்பெய ரென்பது பேசு மறமுதல் நான்கினுந்தாம்
குறைய வரினுமுன் கூறிய காவியங் கோகனகச்
செறிமல ரல்லிப் பொகுட்டினில் வாழுந் திருந்திழையே.

     (உரை I).
எ - ன், இவ்விலக்கணங்களிற் குறையினும் காவியங்கள்
எ - று.

     (உரை II). எ - து, நெறிமுறை தவறாமற் பாடுமிடத்து நல்ல நாளும்
முகூர்த்தமு மிட்டுப் பாட்டுடைத் தலைமகனுக்கு ஒத்த இலக்கணத்திலே
பிரபந்தம் பாடத் தொடங்கப் பெறும்; இப்படிக் காவியம் பாடும் போது
பெருங்காப்பிய நெறியிற் சில குறைந்துவரினும் அறமுதல் நான்கும்
குறைவுபட்டு வரினும் அது சிறுகாப்பிய மென்று பேசப்படும் எ - று.

     (பி - ம்) 1 ‘நிறைநீக்கலும்’ 2 ‘பெறுபெயர்’ (40)

தொகை நிலைச் செய்யுள்
   
66. பாட்டுப் பொருளிடங் காலந் தொழில்பாட்
                            1டளவினெண்ணின்
நாட்டித் 2தொகுத்தவுஞ் செய்தவன் செய்வித்
                                தவன்றம்பேர்
மூட்டித் தொகுத்தவு மாகி முதனூன் மொழிந்தநெறி
கேட்டுத் தெரிந்துகொள் கிஞ்சுகச் செவ்வாய்க்
                               கிளிமொழியே.

(உரை I). எ - ன், தொகை நிலைச் செய்யுட்களை உணர்த்...................று.