288. வீரசோழியம் (வேற்றுமைப் படலம்)
மிரண்டும் வரும். எல்லாவிடத்தும் சு என்னும் பிரத்தியமழிந்தே வரும்.
'எல்லாவிடத்தும் அழியுமாயின் வருதற்குக் காரணமென்னெனின், வடமொழியான் வாரி யென்னுஞ் சொல்லை வைத்து முதல் வேற்றுமை ஏக வசனத்தைப் பொருள் விளக்குதற்பொருட்டு எவ்வண்ணம் இட்டழித்தான். இவனும் அது போல ஆக்கி அழித்தாலல்லது பதமாகாதென்று இட்டழித்தான் என்க. ஒருவனைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒருத்தியைச் சிறப்பித்த சொல்லின் பின்பும், ஒன்றைச் சிறப்பித்த சொல்லின் பின்பும் அர்,ஆர், அர்கள், ஆர்கள்,கள், மார் என்னும் ஆறு பிரத்தியமும் வரும். இவை எல்லாவிடத்தும் ஆவனவல்ல. பலரைக் கருதின சொல்லின் பின்பு ஆறு பிரத்தியமுமாம்; எனவும்; 'சாத்தன், கொற்றன் என ஒருவனைக் கருதின சொல்லின் பின்பும், சாத்தி,கொற்றி என ஒருத்தியைக் கருதின சொல்லின் பின்பும், யானை குதிரை என ஒன்றைக் கருதின சொல்லின் பின்பும் சு என்னும் எழுவாய் வேற்றுமைப் பிரத்தியம் நிறுத்துக. நிறுத்தவே சொல்லின் பொருண்மாத்திரத்தை விளக்கிற்றாம். சொல்லாவது, சாத்தனென்றுச்சரிக்கப்படாநின்ற சொல். அதன் பொருளாவது கரசணாதியவயவங்களை உடையதொரு பிண்டமாய், 'சாத்தனாவான் எவன்.?' என்று வினாவினார்க்கு 'இவன்' என நின்னாற்சொல்லப்படுகின்றான் யாவன், அவன் எனக் கொள்க. 'எங்கு மழியு மேறியசு' என்பதனால், அச்சொற்களின் பின்பு நின்ற சுவ்வை உலோபித்துச் சாத்தன், கொற்றனென்று உச்சரித்துக் கொள்க,'எனவுங் கூறியவற்றாலும்; முற்குறித்த இரண்டாம் ஐந்தாம் பாட்டுக்களாலும் உணர்க.
பிரயோக விவேகத்திலே பிறர் மதங் கூறலாகக் கூறப்பட்ட 'பன்னும் பகாப்பதம்' என்னும் ஏழாம் பாட்டின் விசேட உரையில்," இறை, உமை, தையல், கோ, வேள், பெண்டு, நாய், நரி, நிலம், நீர் என்னும் பெயர்ப் பகாப்பதங்களைப் பிராதிபதிகமென்றும்; அவை பிராதி பதிகமாவதன்றி முதல் வேற்றுமை உருபு பேற்றனவல்லவென்றும்; அவை எழுவாயாகாவென்றும்; பின்னர் அன், அர், ஆள், ஆர், கள் என்னும் பிரதமா விபத்தியாகிய முதல் வேற்றுமை உருபோடு புணர்ந்து இறைவன், இறைவா,