இதனால் இவ்வாறில்லாத பன்னிரண்டு மெய்களும் தம்மொடும்,
பிறவொடும் நிற்கும் தன்மையன என்பதாம்.
சா:
சுக்கு, நச்சு, பத்து, உப்பு, மகிழ்ச்சி, அயர்வு.
வி:
சொல் முதல் இறுதி எழுத்துகளேனும் சிறு கடிதாய் ஒழிய
இடையெழுத்து வரையறை சொற்பெருக்கத்தைக்
கட்டுப்படுத்தாதோ எனின் -
தமிழின் ஒலியிசைவு படக்கூறும் இவ்விதிகள் அயன் மொழி பெயர்ப்புக்குப்
பயன்படலும், இன்றும் தமிழ்பெரிதும் இவ்வரையறை கடந்தின்மையும்
பற்றிக்கூறினாம். இதனால்
மொழிகட்டுறுங்கால் இவ்விதிகளை அகற்றிக்
கொளலாம்.
29. நூ: ங ஞ ண, நமன எனுமெய்ம்முன்னர்த்
தத்தம் வல்லினம் ஒத்தன நிலையே
பொ:
ங ஞ ண, நமன என்னும் மெல்லின மெய்கள் முன்னே
அவ்வவற்றின் வல்லினம் ஒத்துவரும் நிலையின.
சா:
சங்கு, மஞ்சள், கண்டேன் நொந்தாள், வெம்பினன் மன்று.
30. நூ: யரழ முன்னர் சொல்முதல் மெய்வரும்
பொ:
யரழ என்னும் இம்மூன்று இடையின மெய்களின்முன் சொல்லுக்கு
முதலாம் உயிர்மெய் எழுத்துகள் வரும்.
சா:
வேய், வேர், கீழ் - நாற்றம், மரம், தடிப்பு, பண்பு, யாது, ஞாலம்,
வலிவு, சார்பு,கள்.
31. நூ: ணன முன் கசதப ஞமவய இவை வரும்.
பொருள் வெளிப்படை
சா:
விண், மன், கண், மின் - காட்சி, சீர்மை, பாங்கு, ஞாயிறு மழை,
வடிவு, யாக்கை; பொருந்தப்பொருத்துக.
32. நூ: லளடற முன்னர்க் கசப மயங்கும்.
பொருள் வெளிப்படை
சா:
மல்குதல், கொல்சாரை, இல்பொருள்; வெள்கினான், கொள்சட்டி,
உள்பொருள்; உட்கார்ந்தான்,
கட்சி, முட்புதர்; கற்க, கற்சுவர், கற்பு.
33. நூ: லளமுன் வயாவும் வம்முன் ‘யா’ வுமாம்
சா:
நல்வழி; உள்வழி; கொல்யானை; கள்யாறு; தெவ்யார்; அவ்யானை.
|