பக்கம் எண் :
 
பெ

    பொ: உயிர், ந, ம, க, த, ப வரிசைப்பட்ட பன்னிரண்டெழுத்தும்; யா,
ஞா மட்டிலும் சகர வரிசையில் ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சொ, சோ
என்னும் பத்தெழுத்தும் வ வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ
என்னும் எட்டும் தமிழில் சொல்லுக்கு முதலாக வரும் எழுத்துகளாம்.

 

    வரிசை என்பது க முதல் கௌ வரை முடிய அமையும் வருக்கத்தை.
 

    வி: யாழ், ஞாலம்; பிறவற்றைத் தொகுத்துணர்க.  ஞெகிழி நெகிழி

என்பதன் முதற்போலி.  நன்னூலாசிரியர் ‘ங’ கரத்தை மொழி முதலாக்கக்
கரணியமாகிய அங்ஙனம், அங்கனம் என்பதன் திரிபே என்பது
மொழியறிஞர் முடிவு.

 

சொல்லிறுதி எழுத்து

 

26. நூ: எதவிர் பதினோ ருயிரும் மெய்யில்
       னமன யரல வழள ஒன்பதும்
       சொல்லின் இறுதியில் வருமெழுத்தாகும்.

 

பொருள் வெளிப்படை

 

    முன்னூல்களில் கூறப்பெற்ற ந, ஞ, ங மூன்றும் சொல்வழக்கிறந்
தமையின் விடப்பட்டன.

 

27. நூ: அவற்றுள்,
       எவ்வும் மற்ற உயிர்க்குறில் நான்கும்
       அளபெடை ஒலியிலும் ஒளவென் நெடிலுயிர்
       கவ மெய்யொடு கலப்பிலும் இறுமே.

 

சான்று எளிதில் அடையலாம்

 

பொ: மேற்கூறிய சொல்லிறுதி எழுத்துக்களில் முன்வாராது என மறுத்த
எவ்வும் பிற நான்கு குறிலுயிர்களும் நெடில் நீண்டுஒலிக்கும் அளபெடை
நீட்சியிலும், ஒளவென்னும் நெடில் க வவோடு கலந்து கௌ, வௌ என்றும்
சொல்லுக்கு இறுதியாய் வரும்.

 

சொல்லிடை எழுத்து

 

28. நூ: கசதப தம்மெய் யோடு தாமும்
       ரழ தம்மோ டன்றிப் பிறவொடும்
       சொல்லின் இடையில் அடுத்தடுத்துறுமே.

    பொ: க, ச, த, ப என்னும் நான்கு மெய்யும் தம்மொடு தாமே
இரண்டுற நின்றும் ர, ழ என்னும் இரண்டு மெய்யும் தம்மொடு தாம்
நில்லாது பிறமெய்களோடு நின்றும் ஒரு சொல்லிடையே அடுத்தடுத்து
இயலும்.