எழுத்ததிகாரம் | 120 | முத்துவீரியம் |
(வ-று.) முந்நூறு. (283)
நான்கும் ஐந்தும்
443. நான்கு மைந்து முதனிலை
திரியா.
(இ-ள்.) நான்கென்னும்
எண்ணும் ஐந்தென்னும் எண்ணுந் தம் மொற்றுக்கள்
நிலைதிரியாவா மென்க.
(வ-று.) நானூறு, ஐந்நூறு
எனவரும். (284)
தொண்ணூறும்
தொள்ளாயிரமும்
444. ஒன்பா னொடுபத்து நூறு
மொன்றின்
முன்னதி னேனைய முரணி
யொவ்வொடு
தகர நிறீஇப்பஃ தகற்றி னவ்வை
நிரலே ணளவாய்த்
திரிப்பது நெறியே.1
(இ-ள்.) ஒன்பதென்னும்
எண்ணொடு பத்தென்னும் எண்ணும் நூறென்னும் எண்ணும்
வந்து புணரின் பத்தென்னும் எண்ணை நூறாகவும்,
நூறென்னும் எண்ணை ஆயிரமாகவுந்
திரித்து,
ஒகரத்தொடு தகரமெய்யை நிறுத்திப் பத்தை நீக்கி
னகரமெய்யை முறையே
ணகரமெய்யாகவும்,
ளகரமெய்யாகவுந் திரிப்பது நெறியாமென்க.
(வ-று) தொண்ணூறு,
தொள்ளாயிரம்.
(வி-ரை.) ஒன்பது + பத்து =
தொண்ணூறு. இப்புணர்ச்சியில் நிலைமொழியும்
வருமொழியும் புணருங்கால் ஒகரம் நீங்கலாக
ஏனையவெல்லாம் மாறிவிடுகின்றது.
தொல்காப்பியரும், இலக்கண விளக்க நூலாரும்,
நேமிநாதரும் இச்சொற்களுக்கு ஒவ்வொரு
விதமாகப்
புணர்ச்சி விதி கூறுவர். எனினும் இவையெல்லாம்
பொருந்துவதன்று என்றும்,
தொண்டு + நூறு = தொண்ணூறு;
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் என ஆயிற்று
எனக்
கொள்வதே சிறப்புடைத்து என்றும் கூறுவர் திரு.
ஞா. தேவநேயப் பாவாணர்
அவர்கள்.
9-தொண்டு;
90-தொண்பது; 900-தொண்ணூறு; 9000-தொள்ளாயிரம் என
வழங்குவதே
முறையென்றும் தொண்டு என்னும் வழக்கு
அற்றுப்போக, தொன்பது
9-ஐயும், தொண்ணூறு
90-ஐயும்,
தொள்ளாயிரம் 900-ஐயும் வழங்கத்
தொடங்கிவிட்டன
என்றும் அவர் கூறுவர்.
ஒன்பது
என்பதைத் தொண்டு என வழங்கினர் என்பதற்குத்
‘தொண்டு
தலையிட்ட’ (தொல் -
1358) என்பதையும், ‘தொண்டு
படுதிவவு’ (மலைபடு-21)
என்பதையும் மேற்கோளாகக்
காட்டுவர். (தொல்-எழுத்து-இளம்-445-விளக்கவுரை.) (285)
1. நன் - எழுத் - உயிரீற் -
44.
|