எழுத்ததிகாரம் | 121 | முத்துவீரியம் |
ஒன்று இரண்டின்முன்
ஆயிரம்
445. உகரங் கெடுமுத லோடு மிரண்டு
மாயிர முன்வருங் காலை
யான.
(இ-ள்.) ஆயிரமென்னும்
எண்வரின் ஒன்றென்னும் எண்ணின் உகரமும்
இரண்டென்னும்
எண்ணின் உகரமுங் கெடும்.
(வ-று.) ஓராயிரம்,
ஈராயிரம். (286)
மூன்றன் மெய்
446. மூன்றன் மெய்யே வகார
மாகும்.
(இ-ள்.) மூன்றென்னும்
எண்ணின் னகரமெய் வகரமெய்யாகத் திரியுமென்க.
(வ-று.) மூவாயிரம். (287)
நான்கன் மெய்
447. நான்கன் மெய்யே
லகார மாகும்.
(இ-ள்.) நான்கென்னும்
எண்ணினகரம் லகரமெய்யாகத் திரியுமென்க.
(வ-று.) நாலாயிரம். (288)
ஐந்தன் மெய்
448. ஐந்தன் மெய்யே யகார
மாகும்.
(இ-ள்.) ஐந்தென்னும்
எண்ணின் நகரம் யகரமெய்யாகத் திரியுமென்க.
(வ-று.) ஐயாயிரம். (289)
ஆறு என்பதன் முன் ஆயிரம்
449. ஆறென் கிளவி யதனிலை
திரியா.
(இ-ள்.) ஆறென்னும் எண்
அதனிலை கெடாவாம்.
(வ-று.) ஆறாயிரம். (290)
|