சொல்லதிகாரம் | 125 | முத்துவீரியம் |
(இ-ள்.) அச்சொல் பெயர்ச்சொல்லெனவும்,
வினைச்சொல்லெனவும், இடைச்சொல்
லெனவும், உரிச்சொல் லெனவும் நான்கு
வகைப்படுமென்றுணர்க. (4)
பெயர்
462. அவற்றுள்,
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையும்
ஆயிரு திணைக்கு மோரன்ன வுரிமையும்
ஆகு மென்மனா ரறிந்திசி
னோரே.
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த பெயர்வினை யிடையுரியாகிய
நான்கனுட் பெயரென்று
கூறப்படுவது -
உயர்திணைக்குரியவாய் வருவனவும்,
அஃறிணைக்குரியவாய் வருவனவும்,
இருதிணைக்கும் ஒத்த வுரிமையாய் வருவனவுமாகிய மூன்று வேறுபாட்டனவாம். (5)
சொல்லாவது யாது
463. ஓருரை தொடர்பொது
வுரைபடு மிருதிணை
ஐம்பான் மூவிட மறுவகை வழக்கு
வெளிப்படை குறிப்பின்
விளக்குவ துரையே.
(இ-ள்.) ஒருமொழியும்,
தொடர்மொழியும், பொதுமொழியும், இருதிணையாகிய
ஐம்பாலும், மூவிடனும், அறுவகை வழக்கும்
வெளிப்படையானும் குறிப்பானும் விளக்குவது
சொல்லாம்.(6)
ஒருமொழி
464. ஒருபொருள் பயப்ப
தோருரை யாகும்.
(இ-ள்.) ஒருபொருளைத்தருவது
ஒருமொழியாம் என்க.
(வ-று.) நிலம், நெருப்பு,
காற்று, ஆகாயம். (7)
தொடர் மொழி
465. பலபொருள் பயப்பது
தொடர்சொற் கிளவி.
(இ-ள்.) பலபொருளைத் தருவது
தொடர்மொழியாகும்.
(வ-று.) நிலங்கடந்தான்,
நிலத்தைக்கடந்தமால். (8)
|