சொல்லதிகாரம் | 161 | முத்துவீரியம் |
(வ-று.) உழாஅஅல், கோஒஒள்.
(131)
பொதுப் பெயர்
விளியேற்குமாறு
589. மெய்யுயி ரிறுதி
விரவுப் பெயர்ச்சொல்
உயர்திணைப் பெயரொடு
மொத்து நடக்கும்.
(இ-ள்.) மெய்யையும்
உயிரையும் ஈறாகிய பொதுப்பெயர் முற் கூறிய வுயர்திணை
நெறியான் விளியேற்கும்.
(வ-று.) சாத்தீ, பூண்டே, தந்தாய்,
எம்; சாத்தா, கூந்தால், மக்காள், எ-ம்; சாத்தி,
பூண்டு, தந்தை, சாத்த, பிறவுமன்ன. (132)
அஃறிணைப் பெயர்
விளியேற்குமாறு
590. ஆவியு மொற்று மந்த
மாகிய
அஃறிணைப் பெயரெலா மேயொடு சிவணும்.
(இ-ள்.) உயிரையும் மெய்யையும் ஈறாகிய
அஃறிணைப் பெயரெல்லாம் ஏகாரம்
பெற்று விளிக்குமென்க.
(வ-று.) மரமே, நரியே,
புலியே, பிறவுமன்ன. (133)
அம்ம என்பது
விளியேற்குமாறு
591. அம்ம வசைச்சொ
னீட்டமும் விளிக்கும்.
(இ-ள்.) அம்மவென்னும்
அசைச்சொல்நீட்டமும் விளிக்கும்.
(வ-று.) அம்மாகொற்றா. (134)
சேய்மைக்கண்
விளிக்குமாறு
592. இருதிணை மருங்கினு
மெல்லாச் சொற்களுஞ்
சேய்மையி னளவைக்
கடந்துசென் றிசைக்கும்.
(இ-ள்.) இருதிணைக்கண்ணும்
விளிக்குங்காற் சேய்மையில் தத்தமளவைக்
கடந்துசென்றொலிக்கும்.
(வ-று.) நம்பீ இ இ, நங்கா
அய் பிறவுமன்ன. (135)
விளியேலாப் பெயர்கள்
593. தமர்நுமர் தமனுமன்
றமணம ணுமள்விளி
ஏலா நமர்நம ளென்பது
மற்றே.
|