பொருளதிகாரம் | 240 | முத்துவீரியம் |
(வ-று.)
தேவரிற் பெற்றநம் செல்வக் கடிவடி
வார்திருவே
யாவரிற் பெற்றினி யார்சிதைப்
பாரிமை யாதமுக்கண்
மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி
மொய்பொழில்வாய்ப்
பூவரிற் பெற்ற குழலியென் வாடிப்
புலம்புவதே. (திருக். 14)
(கு-ரை.) தேவரிற் பெற்றகடி -
தெய்வத்தால் பெற்ற அழகிய மணம். முக்கண் மூவரிற்
பெற்றவர்
- கதிரவன், மதி, தீ ஆகிய மூன்றையும் மூன்று கண்களாகப்
பெற்றவர். குழலி -
விளிப் பொருட்டு.
இடமணித்தென்றல்
என்பது, அருட்குணங்கூறி
வற்புறுத்தவும் ஆற்றாமை நீங்காத தலைமகட்கு
நும்மூரிடத்திற் கெம்மூரிடமித் தன்மைத்தெனத்
தன்னூரினணிமை கூறி வற்புறுத்தல்,
(வ-று.)
வருங்குன்ற மொன்றுரித் தோன்றில்லை
யம்பல வன்மலயத்
திருங்குன்ற வாண ரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங்
கனங்குழையே. (திருக். 15)
(கு-ரை.) வரும் குன்றம் - யானை. வெண்ணிறக்
கஞ்சுகம் - வெண்மை நிறமான
சட்டை.
ஆடிடத்துய்த்தல்
என்பது, அணிமைகூறி நீங்கினோன்,
இனி நீ முற்பட்டு விளையாடு,
யானிங்ஙனம்போய்
அங்ஙனம் வருகிறேனென அவளை யாடிடத் துய்த்தல்.
(வ-று.)
தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந்
திங்களின்வாய்ந்
தளிவளர் வல்லியன் னாய்முன்னி
யாடுபின் யானளவா
ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன்
துளிவளர் சாரற் கரந்துங்ங னேவந்து தோன்றுவனே.
(திருக். 16)
|