பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்31முத்துவீரியம்

(இ-ள்) விலை கூறலினும், புலம்பலினும், இசையினும், விளியினும் அளவைக்
கடந்திசைக்கும். (105)

போலி எழுத்துக்கள்

106. இகரமும் யகரமு மிறுதியில் விரவும்.

(இ-ள்.) இகரவுயிரும், யகரமெய்யு மிறுதியில் விரவிவரும்.

(வ-று.). பேஇ-பேய், நாஇ-நாய். (106)

இதுவுமது

107. அகரமு மிகரமு மைகார மாகும்.

(இ-ள்.) அகரமும் இகரமும் புணர்ந்து ஐகாரமாக வொலிக்கும்.

(வ-று.) அ+இ=ஐ. (107)

இதுவுமது

108. அகரமு முகரமு மௌகார மாகும்.

(இ-ள்.) அகரமும் உரகமும் புணர்ந்து ஒளகாரமாக வொலிக்கும்.

(வ-று.) அ+உ=ஒள. (108)

எழுத்துச் சாரியைகள்

109. நெட்டெழுத் தெல்லாங் காரமொடு நிலையும்.

(இ-ள்.) நெட்டெழுத்துக்க ளெல்லாங் காரச்சாரியை பெறும்.

(வ-று.) ஆகாரம், பிறவுமன்ன. (109)

இதுவுமது

110. அவற்றுள்,
    ஐ, ஒளக்கானு மடையவும் பெறுமே.