எழுத்ததிகாரம் | 32 | முத்துவீரியம் |
(இ-ள்.) முற்கூறியவற்றுள்,
ஐயும் ஒளவும் கான்சாரியையும் பெறும்.
(வ-று.) ஐகான், ஒளகான். (110)
இதுவுமது
111. காரங் கான்கரம்
பெறுமிரு மைக்குறில்.
(இ-ள்.) உயிர்க்குறிலும்,
உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரமும் பெறும்.
(வ-று.) அகரம் அகாரம் அஃகான்.
மகரம் மகாரம் மஃகான்.
(111)
மொழிமுதற் போலியும்
மொழியிடைப் போலியும்
112. ச, ஞ, ய, முன் அ, ஐ, யாகு
முதலிடை.
(இ-ள்.) ச, ஞ, யக்களுக்கு
முன்னின்ற அகரம் முதலினும் நடுவினும் ஐகாரமாகத்
திரியும்.
(வ-று.) பசல்-பைசல், முரஞ்சு-முரைஞ்சு,
பயல்-பையல், அரயர்-அரையர். (112)
மொழியிடைப் போலி
113. ஐகான் யவ்வழி
நவ்வொடு சில்வழி1
ஞஃகா னுறழு மென்மனார்
புலவர்.
(இ-ள்.) தனி
ஐகாரத்துக்குப் பின்னும் யகரமெய்க்குப் பின்னும்
வருகிற நகரம்
ஞகரமாகுஞ் சிலவிடங்களில்.
(வ-று.) ஐநூறு - ஐஞ்ஞூறு, நெய்
நின்று - நெய்ஞ்ஞின்று. (113)
மொழியிறுதிப் போலி
114. அஃறிணைப்
பெயர்ச்சொ லிறுதி மகாரம்
னகரமா மொரோவழி நாடுங்
காலே.
(இ-ள்.)
மகரமெய்யிறுதியாகிய அஃறிணைப்
பெயர்ச்சொற்களிற் சில வகரம்
னகரமாகத்
திரியும்.
1. நன் - எழுத் - 69
|