பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்32முத்துவீரியம்

(இ-ள்.) முற்கூறியவற்றுள், ஐயும் ஒளவும் கான்சாரியையும் பெறும்.

(வ-று.) ஐகான், ஒளகான். (110)

இதுவுமது

111. காரங் கான்கரம் பெறுமிரு மைக்குறில்.

(இ-ள்.) உயிர்க்குறிலும், உயிர்மெய்க் குறிலும் காரம், கான், கரமும் பெறும்.

(வ-று.) அகரம் அகாரம் அஃகான். மகரம் மகாரம் மஃகான். (111)

மொழிமுதற் போலியும் மொழியிடைப் போலியும்

112. ச, ஞ, ய, முன் அ, ஐ, யாகு முதலிடை.

(இ-ள்.) ச, ஞ, யக்களுக்கு முன்னின்ற அகரம் முதலினும் நடுவினும் ஐகாரமாகத்
திரியும்.

(வ-று.) பசல்-பைசல், முரஞ்சு-முரைஞ்சு, பயல்-பையல், அரயர்-அரையர். (112)

மொழியிடைப் போலி

113. ஐகான் யவ்வழி நவ்வொடு சில்வழி1
    ஞஃகா னுறழு மென்மனார் புலவர்.

(இ-ள்.) தனி ஐகாரத்துக்குப் பின்னும் யகரமெய்க்குப் பின்னும் வருகிற நகரம்
ஞகரமாகுஞ் சிலவிடங்களில்.

(வ-று.) ஐநூறு - ஐஞ்ஞூறு, நெய் நின்று - நெய்ஞ்ஞின்று. (113)

மொழியிறுதிப் போலி

114. அஃறிணைப் பெயர்ச்சொ லிறுதி மகாரம்
    னகரமா மொரோவழி நாடுங் காலே.

(இ-ள்.) மகரமெய்யிறுதியாகிய அஃறிணைப் பெயர்ச்சொற்களிற் சில வகரம்
னகரமாகத் திரியும்.

1. நன் - எழுத் - 69