யாப்பதிகாரம் | 447 | முத்துவீரியம் |
ஏந்திசைத் தூங்கலோசை
ஒன்றிய வஞ்சித்
தளையா னொழுகுவ
தேந்திசைத் தூங்க லெனப்படு மெனலே.
என்பது, ஒன்றியவஞ்சித்
தளையான் வருஞ்செய்யுள் ஏந்திசைத்
தூங்கலோசையாகும்.
(வ-று.)
1வளவயலிடைக் களவயின்மகிழ்.
(55)
பிரிந்திசைத் தூங்கலோசை
956. ஒன்றாத வஞ்சித்
தளையான்
வருமது
பிரிந்திசைத் தூங்க லெனப்பெயர்
பெறுமே.
என்பது, ஒன்றாத
வஞ்சித்தளையான் வருவது பிரிந்திசைத்
தூங்கலோசை யாகும்.
(வ-று.)
2பூந்தாமரைப் போதலமர. (56)
அகவற்றூங்க லோசை
957. இவ்விரு தளையும் பிறவும்
விரவித்
தொடருவ தகவற் றூங்கலா மெனலே.
என்பது, ஒன்றிய வஞ்சித்தளையும்
ஒன்றாத வஞ்சித்தளையும் பிறதளைகளும்
விரவிவருவது அகவற் றூங்க லோசையாகும்.
(வ-று.)
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ் (57)
வஞ்சித் தாழிசை
958. குறளடி நான்கா யொருபொருள்
மேல்மூன்
றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை.
1. இப்பாடல் 446 ஆம்
பக்கத்திற் காண்க.
2. இப்பாடல் 446 ஆம் பக்கத்திற்
காண்க.
|