| யாப்பதிகாரம் | 447 | முத்துவீரியம் |  
  
ஏந்திசைத் தூங்கலோசை 
      ஒன்றிய வஞ்சித்
      தளையா னொழுகுவ 
      தேந்திசைத் தூங்க லெனப்படு மெனலே. 
      என்பது, ஒன்றியவஞ்சித்
      தளையான் வருஞ்செய்யுள் ஏந்திசைத் 
      தூங்கலோசையாகும். 
      (வ-று.) 
      1வளவயலிடைக் களவயின்மகிழ்.
      (55) 
      பிரிந்திசைத் தூங்கலோசை 
      956. ஒன்றாத வஞ்சித்
      தளையான்
      வருமது 
           பிரிந்திசைத் தூங்க லெனப்பெயர்
      பெறுமே. 
      என்பது, ஒன்றாத
      வஞ்சித்தளையான் வருவது பிரிந்திசைத்
      தூங்கலோசை யாகும். 
      (வ-று.) 
      2பூந்தாமரைப் போதலமர. (56) 
      அகவற்றூங்க லோசை 
      957. இவ்விரு தளையும் பிறவும்
      விரவித் 
           தொடருவ தகவற் றூங்கலா மெனலே. 
      என்பது, ஒன்றிய வஞ்சித்தளையும்
      ஒன்றாத வஞ்சித்தளையும் பிறதளைகளும் 
      விரவிவருவது அகவற் றூங்க லோசையாகும். 
      (வ-று.) 
      பூந்தாமரைப் போதலமரத் 
      தேம்புனலிடை மீன்றிரிதரும் 
      வளவயலிடைக் களவயின்மகிழ் (57) 
      வஞ்சித் தாழிசை 
      958. குறளடி நான்கா யொருபொருள்
      மேல்மூன் 
           றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை. 
      1. இப்பாடல் 446 ஆம்
      பக்கத்திற் காண்க. 
      2. இப்பாடல் 446 ஆம் பக்கத்திற்
      காண்க. 
			
				
				 |