பக்கம் எண் :
 
அணியதிகாரம்516முத்துவீரியம்

(வ-று.)

அன்னைபோ லெவ்வுயிருந் தாங்கு மனபாயா
நின்னையா ரொப்பர் நிலவேந்தர்-அன்னதே
வாரி புடைசூழ்ந்த வையகத்திற் கில்லையாற்
சூரியனே போலுஞ் சுடர். (தண்டி-மேற்) (8)

புகழுவமை

1162. உவமையைப் புகழ்ந்துவ மிப்பது புகழே.

என்பது, உமைப் பொருளைப் புகழ்ந்துகூறி உவமேயப் பொருளை வியப்பது
புகழுவமை.

(வ-று.)

இறையோன் சடைமுடிமே லெந்நாளுந் தங்கும்
பிறையேர் திருநுதலும் பெற்ற-தறைகடல்சூழ்
பூவலயந் தாங்கு மரவின் படம்புரையும்
பாவைநின் னல்குற் பரப்பு. (தண்டி-மேற்) (9)

நிந்தையுவமை

1163. உவமையைப் பழித்துவ மிப்பது நிந்தை.

என்பது, உவமைப்பொருளை நிந்தித்து உவமேயப்பொருளை வியப்பது
நிந்தையுவமை.

(வ-று.)

மறுப்பயின்ற வாண்மதியு மம்மதிக்குத் தோற்கு
நிறத்தலரு நேரொக்கு மேனுஞ்-சிறப்புடைத்துத்
தில்லைப் பெருமா னருள்போற் றிருமேனி
முல்லைப்பூங் கோதை முகம். (தண்டி-மேற்) (10)

நியமவுவமை

1164. இதற்கிஃ தேயுவம மென்பது நியமம்.

என்பது, இந்தப் பொருளுக்கு இப்பொருளேயுவமை யென்று கூறல் நியமவுவமை.

(வ-று.)

தாதொன்று தாமரையே நின்முக மொப்பதுமற்
றியாதொன்று மொவ்வா திளங்கொடியே-மீதுயர்த்த