எழுத்ததிகாரம் | 56 | முத்துவீரியம் |
(இ-ள்.) வேற்றுமைக்கண் வல்லெழுத்தை
முதலாகவுடைய சொற்களல்லாத
வெழுத்துக்களையுடைய சொற்களுக்கு முன், ண, னக்களை
இறுதியாகிய சொற்களியல்பாம்.
(வ-று.) மண், பொன், வலிது,
நீட்சி, யாப்பு. (31)
ண ள; ன, ல என்பவற்றின்
முன் த, ந
191. ண, ள, ட, ணவாம் ன, ல,
றனவாந்த நவரின்.
(இ-ள்.) ண, ள க்களுக்குமுன்
த, நக்கள்வரின் ட, ணக்களாம். ன, லக்களுக்குமுன் த,
நக்கள்வரின் ற, னக்களாம்.
(வ-று.) மண் + தீது, = மண்டீது,
தெள் + நலம் = தெண்ணலம், பொன் + தீது =
பொன்றீது, கல் + நலம் = கன்னலம், வாள் + தீது = வாடீது. வாள் +
நன்மை = வாணன்மை,
வேல் + தீது = வேறீது. வேல் +
நன்மை = வேனன்மை.
(வி-ரை.)
‘‘னலமுன் றனவும் ணளமுன்
டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங்
காலே’’ (மெய்யீற் - 34)
என்பர் நன்னூலாரும். (32)
ஒள, ஞ, ந, ம, வ
என்பவற்றின் முன் முற்றுகரம்
192. ஒளவிறு ஞ, ந, ம, வ
விறுதியு முகர
முற்றுகர முன்னிலை
யுறழ்தலும் விதியாகும்.
(இ-ள்.) ஒளவீறும் ஞ, ந, ம, வவீறும்,
முற்றுகர முன்னிலையாயி னுகரச்சாரியை
பெற்று ஒருகால் இயல்பும் ஒருகால் மிகலுமாம்.
(வ-று.) கௌவுகொற்றா -
கௌவுக்கொற்றா; உரிஞுகொற்றா -உரிஞுக்கொற்றா;
பொருநுகொற்றா - பொருநுக்கொற்றா; திருமுகொற்றா
- திருமுக்கொற்றா;
தெவ்வுகொற்றா-தெவ்வுக்கொற்றா எனவரும். (33)
உயர்திணைப்பெயர் முன்
நாற்கணம்
193. இருவழி யினுமுட லுயிரையு மிறுதியாம்
உயர்திணை முனரெலா
முறவியல் பாகும்.
(இ-ள்.) அல்வழிவேற்றுமை யிரண்டிடத்து
மெய்யையும் உயிரையு மிறுதியாகிய
வுயர்திணைப் பெயர்க்குமுன் வன்கண
|