காலத்தை வெளிப்படையாகவும் குறிப்பாகவும் ஏற்பது முற்று. ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐம்பாலையும் படர்க்கையிலும் பன்மையையும் ஒருமையையும் தன்மை, முன்னிலையிலும் மூன்று காலத்திலும் சேர்த்துக் கொண்டு வர முற்றுச் சொல் ஒன்றே இருபத்தேழு ஆக வரும்.
|
விளக்கம் : |
செய்தான் அவன் |
- வினைமுற்று, பொருட்பெயர் கொண்டது.
|
தோன்றியது ஊர் |
- வினைமுற்று, இடப்பெயர் கொண்டது.
|
வந்தது மழை |
- வினைமுற்று, காலப்பெயர் கொண்டது.
|
எழுதியது கை |
- வினைமுற்று, சினைப்பெயர் கொண்டது.
|
வென்றது உண்மை |
- வினைமுற்று, பண்புப்பெயர் கொண்டது.
|
சிறப்புற்றது வாழ்வு |
- வினைமுற்று, தொழிற்பெயர் கொண்டது.
|
செய்தான் |
- இறந்த காலத்தைத் தெளிவாக விளக்கியது.
|
நல்லன் |
- காலத்தை வெளிப்படுத்தவில்லை.
|
படர்க்கை: ஐந்துபால் X மூன்று காலம் - 15
|
தன்மை: ஒருமை, |
பன்மை என இரண்டு X மூன்று காலம் - 6
|
முன்னிலை: ஒருமை, |
பன்மை என இரண்டு X மூன்று காலம் - 6 |
|
------ 27 |
|