4. கழிவு
|
: சிறியகட்
பெறினே எமக்கு ஈயுமன்னே (புறம். 235) - அவன் இப்பொழுது இறந்ததனால்
எமக்குக் கொடுத்தல் கழிந்தது என்னும் பொருளைத் தருவதால் கழிவு. |
‘கொல்’ தரும் பொருள்கள் :
|
1. ஐயம் |
: இவ்வுரு குற்றி கொல்! மகன் கொல்! - குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருவதால் ஐயம்.
|
2. அசை நிலை |
:
‘என்நோற்றான் கொல் எனும் சொல்’ (குறள். 70) - பொருள்
இல்லாமல் சார்த்தப்பட்டிருப்பதால் அசைநிலை.
|
‘மா’ தரும் பொருள்:
|
1. அசைநிலை
|
:
உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யானே - உப்பில்லாமல்
புல்லரிசி உணவை உண்பாயாக. இங்கு ‘மா வியங்கோளை அடுத்து
அசைநிலையாக உள்ளது.
|
‘ஓ’ தரும் பொருள்கள்: |
1. நீக்கம் |
: (பிரிநிலை) இவனோ கொண்டான்
- இது பலருள் நின்றும் ஒருவனைப் பிரித்து நிற்பதால் பிரிநிலை.
|
2. எதிர்மறை |
: அவனோ கொண்டான்
- அவன் கொண்டிலன் என எதிர்மறைப் பொருளைத் தருவதால் எதிர்மறை.
|
3. அசை |
:
‘காணிய வம்மினோ’- காண வாருங்கள். இங்குப் பொருள் இல்லாமல் வந்துள்ளதால் அசை.
|
4. தெரி (தெரிநிலை) |
: ஆணோ? அதுவுமன்று பெண்ணோ? அதுவுமன்று - இங்கு அத்தன்மை இல்லாமையைத் தெரிவிப்பதால் தெரிநிலை.
|