பக்கம் எண் :
 
சுவாமிநாதம்33எழுத்ததிகாரம்
 

விளக்கம் : பாக்கு, தெய்வம், பஞ்சி, பந்து.

பொய்கை, கொய்சகம், செய்ந, நெய்தல், ஆய்பு, வாய்மை, தெய்வம்.

சேர்க,-, சேர்தல், பகர்நர், மார்பு. நீர்மை. 
பார்வை,-.

வாழ்க,-, அமிழ்து, வாழ்நர், சூழ்பு, கீழ்மை, மகிழ்வு. 
அம்பு,-,-.

வெட்க, வெட்சி, மீட்பு.

கற்க, அற்சிரம், கற்பு.

வெல்க, வல்சி, சால்பு, கல்வி, கல்யாணம்.

கொள்கை,-, கொள்பவர், கள்வன்,-.

எண்கு, பண்பு, -, ஆண்மை, -, -.

புன்கு, அன்பு, நன்செய், -, மென்மை -, -.

  ஐ = அ+இ = அ+ய்
ஒள = அ+உ = அ+வ்

     ஐ, ஒள என்ற இரண்டையும் தனியே ஒலிக்கும்போது முறையே
அ + இ, அ + உ என்ற கூட்டுயிர்களாக (Diphthong) உச்சரிக்கிறோம்.
மொழியியலில் ஒலியனியல் (Phonemics) என்று தனிநிலை அமைத்து
ஒலியின் பயன் நிலையில் பார்க்கும்போது அவற்றை முறையே அ+ய்,
அ+வ் என்று கொள்ள வேண்டியுள்ளது. (விளக்கத்திற்கு செ. வை. சண்முகம்
எழுதிய பழந்தமிழில் ஐகார ஒளகாரங்கள் என்ற கட்டுரையைப் பார்க்க)

ஐகார அகரப் போலி

வைச்ச - வச்ச
ஐஞ்சு - அஞ்சு
மையல் - மயல்
அரைசு - அரசு