தகரமாக மாறியது சங்ககாலத்திலும் சகரமாக மாறியது பிற்காலத்திலும் ஏற்பட்டிருக்கவேண்டும். சங்க காலத்தின் முற்பகுதி ஸ என்பது மெய் கெட்டு மாறியதும் உண்டு (T. Burrow. Collected papers in Dravidan Linguistics p. 151, 154) அதனால்தான் ஸஹா - (சபா) அவை என்று வந்தது. ஹ > அ - அரன் ஹ > க - மோகம் க்ஷ > க்க - பக்கம் க்ஷ > ச்ச - தச்சன் ஆ > ஐ - மாலை ஈ > இ - புரி அருகன் என்பதிலிருந்து ஆருகதன் வந்ததால் அகரம் ஆகார மாயிற்று. சிவன் என்பதிலிருந்து சைவன் வந்ததால் இகரம் ஐகார மாயிற்று. புத்தன் - பௌத்தன் - உகரம் ஒளகாரமாயிற்று இருடி - ஆரிடம் - ‘இரு’ என்பது ‘ஆர்’ ஆயிற்று நர + இந்திரன் > நரேந்திரன் என்பதனால் இகரம் ஏகார மாயிற்று. குல + உத்துங்கன் > குலோத்துங்கன் என்பதனால் உகரம் ஓகாரமாயிற்று. கேவலம் - கைவலம் என்பதனால் ஏகாரம் ஐகாரமாயிற்று கோசலம் - கௌசலை என்பதனால் ஓகாரம் ஒளகாரமாயிற்று. எதிர்மறை : நாதன் - அநாதன் உசிதம் - அநுசிதம் முதற் பகுதி நன்னூலையும் (147) பிற்பகுதி (அ ஆ ஐ என்ற மூன்றாம் வரி முதல்) வீரசோழியத்தையும் (11 ஆம் சூத்திரம்) தழுவி எழுதப் பெற்றுள்ளன. |