சொல். ‘காப்பும் பூண்டிசிற் கடையும் போகல்' என்பது சின் என்னும்
இடைச்சொல்.
பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.
(5)
இடைச்சொன் மரபு
முற்றும்.
-------
எட்டாவது உரிச்சொல் மரபு
உரிச்சொல்லின் பொது இலக்கணம்
56. ஒண்பேர் வினையோடுந் தோன்றி உரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு.
என்பது சூத்திரம். இவ்வோத்து என்ன பெயர்த்தோ? வெனின்,
உரிச்சொன் மரபு என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம்
என்னுதலிற்றோ?
எனின், உரிச்சொற்குப் பொதுஇலக்கணம் உணர்த்துதல்
நுதலிற்று.
இ - ள்:
உரிச்சொற்கள் பெயரொடும் வினையொடும்
சேர்ந்து,
இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பல சொல் ஒருபொருட்கு உரித்தாயும்
ஒரு
சொல் பல பொருட்கு உரித்தாயும் நடக்கும் எ-று.
(1)
உரிச்சொற்களின் பொருள் ஆமாறு
57. கம்பலை சும்மை கலிஅழுங்க லார்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலைஇன்மை பொன்மை நிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு.
எ - ன்: பலசொல் ஒரு பொருண்மேல் வரும் உரிச்சொல்லும்,
பிறவும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
கம்பலை என்றும், சும்மை என்றும், கலி என்றும்,
அழுங்கல் என்றும், ஆர்ப்பு என்றும் இவை அரவப் பெயராம்; நம்பு, மேவு
இவை நசையாகும்; வம்பு
நிலையின்மை யாகும்; பொன்மை என்பது
நிறமும், பசலையும் ஆகும்; நொடை விலையாம்; வாள்
ஒளியாம் எ-று.
|