பக்கம் எண் :
 
24நேமி நாதம்

      சில உயிரீற்றுச் சந்திகளும் சில ஒற்றீற்றுச் சந்திகளும்

16.   வாய்ந்த உயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்தொற்

     றேய்ந்து புகுதும் இயல்புமாம் -- ஆய்ந்த

     இறுதி வருமெழுத்தாம் ஈறராம் ஓரோர்

     மறுவில்பதங் கெட்டு வரும்.

எ - ன்:   இதுவும் சில உயிரீற்றுச் சந்திகளும் ஒற்றீற்றுச் சந்திகளும்
முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள்:  உயிரீற்று நிலைமொழியின்பின் யாதானும் ஒரு சொல்
வருமாயின் வந்த வெழுத்தின் ஒற்றாதல், வர்க்கத் தொற்றாதல் மிக்கு
முடிவனவும், இயல்பாய் நின்று முடிவனவும் உள;  நிலைமொழி ஈற்றினின்ற
னகரவொற்று வருமொழிமுதல் வந்த எழுத்தின் ஒற்றாய்த் திரியும்; 
மகரமாய்த் திரிதலும் உண்டு; 1  நிலைமொழி இறுதியில் நின்ற அன் ஆர்

ஆகத் திரிதலும் உண்டு. நிலைமொழி ஈற்றில் நின்ற சொற்கள் கெட்டு
முடிவனவும் உள எ - று.

வ - று:   பலா,  மா, சுறா, விளா, படை, ஆ, பூ, பை, வை, கை

என நிறுத்தி, ஏற்ற சொற்களை வருவித்துப், பலாக்காய், மாங்காய்,
சுறாத்தலை, விளாம்பழம், படைத்தொழில், ஆந்தளிர், பூம்பொழில்,
பைந்நாகம், வைந்நுதி, கைம்மணி என வரும்;  அம்மணி, அவ்விரல்,
அஞ்ஞாலம் இவை சுட்டின்முன் மிக்கவை. பிறவும் அன்ன.

‘இயல்புமாம்' என்பதனான் ஆகொண்டார், மாகொண்டார், நகைமதி, வைவேல் என்பன இயல்பாய் முடிந்தன.

‘வாய்ந்த வுயிர்' என்ற மிகையான் இவ்விரண்டு முடிவும் பெற்று முடிவனவும் உள.  அவை கிளிகடிந்தார், கிளிக்கடிந்தார்; பனைபிளந்தார், பனைப்பிளந்தார் என வரும்.  பிறவும் அன்ன.

------------------------

1.     இதற்குத் தட்டான் என நிறுத்தித் தட்டாங்குளம் என
உதாரணம் கொள்க.  (இதனை உலக வழக்கிற் காண்க.)

      தொல், எழுத்து. புள்ளிமயங்கியல். 55-ஆம் சூத்திர உரையில்
உரையாசிரியர் இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் காட்டிய
‘சாத்தங் கொற்றன், கொற்றங் கொற்றன்'  ‘சாத்தங்குடி  கொற்றங்குடி'
என்னும் உதாரணங்களையும் ஈண்டு நோக்குக.  இவற்றுள் ‘அன்'>

என்னும் ஈறுகெட அம் என்னும் சாரியை தோன்றிற்று என அறிக. 
ஈண்டு அச்சூத்திர உரையையும் நோக்குக.