எ - சூ. இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், வேற்றுமை
மரபு
என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள், இத் தலைச்சூத்திரம்
என்னுதலிற்றோ?
எனின், வேற்றுமைகட்குப் பெயரும் முறையும் தொகையும்
பொது இலக்கண
மாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
பெயரும் முறையும் தொகையும் அவை தாமே;
வேற்றுமைகளிற் பெயர்வேற்றுமையின்பின் பெயர் ஒழிந்த ஏழும் தமக்கேற்ற
பொருட்கு ஈடாக வரும் எ - று.
‘தோற்றும்' என்று மிகுத்துச் சொல்லியவதனால் வேற்றுமைகளை ஏலாத
பெயரும் திரிந்தேர்க்கும் என்றவாறு.
எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றிய
யவ்விய நிலையல் செவ்வி தென்ப.
(தொல். வேற். எ.)
வ - று: யான் என்பது என்னை என்னொடு எனக்கு எனவும், யாம்
என்பது எம்மை எம்மொடு எமக்கு எனவும், நாம் என்பது நம்மை
நம்மொடு நமக்கு எனவும் இவை தன்மை; நீ என்பது நின்னை நின்னொடு
நினக்கு எனவும், நீர் என்பது நும்மை நும்மொடு நுமக்கு எனவும் இவை
முன்னிலை; தான் என்பது தன்னை தன்னொடு தனக்கு எனவும், தாம்
என்பது தம்மை தம்மொடு தமக்கு எனவும் இவை படர்க்கை; இவ்வாறு
தன்மையினும், முன்னிலையினும், படர்க்கையினும் இவை திரிந்து ஏற்றபடி
அடைவே கண்டுகொள்க.
(1)
முதல் வேற்றுமை
17. பெயர்எழுவாய் வேற்றுமையாம் பின்பதுதான் ஆறு
பயனிலையும் ஏற்கப் படுதல் - கயல்விழியாய்
ஈற்றின் உருபாறும் ஏற்றல்முக் காலமும்
தோற்றாமை நிற்றல் துண்பு.
எ - ன்:
எழுவாய் வேற்றுமையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
|