| இதற்கு இது எனும் பொருளில் வருதலின் மற்றும் ஓர்மொழி வருமாறு செய்யும் என்றார். (272)  | 
| 108. | னளமெய் ஈற்றுடைச் சொல்லொடு வல்லினத்து |  |   | உயிர்மெய் முதலுடை வினைமொழி இசைவுறீஇ |  |   | றடமெய் ஆம்கால் ஐஎனக் கொளல்முறை; |  |   | முருகற் பணிதலும், கலைமகட் கருதலும் |  |   | உதாரணம்; வேந்தர்ச் சேர்தரல் என்னல் |  |   | போல்வன பன்மைக்கு அப்பொருள் விளைக்கும் |  |   | மொழிகள்என்று உரைப்பார் முத்தமிழ்ப் புலவோர். |  
  | 
| நிலைமொழி ஈறு ன, ள மெய்களுள் ஒன்றாக இருந்து அவை வருமொழிமுதல் வல்லினத்தோடு புணர்ந்து ற, ட மெய்களாகத் திரியும்போது அங்கு (இரண்டன் உருபாகிய) ஐ யின் பொருளைக் கொள்ளலே சரியாகும். முருகற் பணிதல், கலைமகட் கருதல் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம். வேந்தர்ச் சேர்தரல் என்பதுபோல ரகரமும் இனமெய்யும் பெற்றுவருபவை பன்மையில் இரண்டாம் வேற்றுமைப் பொருள் விளைக்கும் என்பர் புலவர் என்றவாறு. | 
	| முருகன் பணிதல் - எழுவாய்த் தொடர், முருகற் பணிதல் - முருகனைப் பணிதல் என்னும் பொருளில் வந்த இரண்டன் தொகை. | 
| கலைமகள்கருதல், கலைமகட் கருதல் என்பனவும் இவ்வாறே. | 
| வேந்தன் சேர்தரல், வேந்தர் சேர்தரல்-அல்வழிப்புணர்ச்சி. | 
| வேந்தற்சேர்தரல் - வேந்தனைச் சேர்தரல் - வேற்றுமை - ஒருமை. | 
| வேந்தர்ச்சேர்தரல் - வேந்தர்களைச் சேர்தரல்-வேற்றுமை-பன்மை (273)  | 
 | 
| 109. | ஒருபொரு ளுடன் உடைமையைப் பொருத்தில் |  |   | இன்எனும் மொழியிடை தோன்றாது இசைவுறும்; |  |   | உமைமகன் எனும் சொல் உதாரணம் ஆமே. |  
  |