தெளிவான மெய்யறிவின் தன்மையை உணர்ந்தவராகிய அகத்தியர் வழிபாடு செய்ததால் அவருக்குஅருளின் தன்மையை உபதேசித்தருளியவராகிய முருகப் பெருமானை (எம்மை வருத்தும்)அறியாமையின் தன்மை நீங்குமாறு போற்றுகின்ற சிறப்புடையேமாதலின் பொருளிலக்கணத்தையும் ஒரு சிறிது கூறலுற்றாம் என்றவாறு. |
இந்நூற்பா தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் கூறுவதால் பொருள் இலக்கணத்தின் தற்சிறப்புப்பாயிரம் ஆகிறது. பொருள் இலக்கணமும் என்பதில் உள்ள உம்மை எழுத்து, சொல் இலக்கணங்களைத் தழுவியது. |
இவர் முந்தையோர் கண்ட முறையில் பொருளிலக்கணம் கூறவில்லை. புது முறையில் அமைத்துக் கொள்கிறார். மிக விரிவாகவும் கூறவில்லை. இவரே “அகப்பொருள் காமம் புறப் பொருள் சமர் என்று அறைந்துளார்; யாமும் அறுவகை இலக்கணத்து ஒருவா சொற்றுளம்; உணர்வது கடனே”1 என்கிறாராதலின் சிறிதே என்றார். (278) |
2. | அகப்பொருள் புறப்பொருள் அகப்புறப் பொருள்என | | முப்பொருள் கூறுதும் முறைப்படி உணர்ந்தே. |
|
பொருளை முறையாக அகப்பொருள், புறப்பொருள், அகப் புறப்பொருள் என மூவகையாகப் பிரித்து அவற்றின் தன்மைகளை உணர்ந்து கூறுவாம் என்றவாறு. |
தொன்மையான நூல்கள் அகம் புறம் என்னும் இரு பகுதிகளை மட்டுமே கூற, இவர் அகப்புறம் என்னும் மூன்றாவ தொன்றைப் புதியன புகுதலாக சேர்த்துக் கொள்கிறார். (279) |
3. | அகப்பொருள் இலக்கணம் அம்பிகை பாகனும் | | நந்தியம் பகவனும் நறைகமழ் மலர்உதிர் | | பொழில்மலி தமிழ்வரைப் புனிதமா தவனும் | | சீரிய புலமைத் திருவள் ளுவன்முதற் | | பலரும் கூறிடல் பார்மிசைக் கேட்டும் | | நாணுறாது இவ்வயின் நவிலல்உற் றனமே. |
|