பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்257
மொழி இலக்கணத்தைக் கூறும் இந் நூலுள் மெய்யறிவுக் கொள்கைகளையே கூறும் இப்பகுதி இடம்பெற்றதேன் எனில் ‘புலமைத் தொழிலாற் பொருந்தும் மெய்ப்பயன் மலம்அறக், களையும் மாதவ நிலையே’1 ஆதலின் கூறல் வேண்டும் என்க.
இந் நூற்பாவால் அகப்புறப்பொருள்நிலை ஆகிய இப்பகுதியும் பொருளிலக்கணமும் நிறைவுசெய்யப்பட்டு அடுத்த யாப்பு இலக்கணத்திற்குத் தோற்றுவாய் செய்துகொள்ளப்பட்டது,
(399)
அகப்புறப்பொருள்நிலை முற்றிற்று,
பொருளிலக்கணம் முற்றிற்று,
ஆகச்சூத்திரம் 399