| நூற்பா |
| 2. அடி வரையறை இல்லை, |
| நேரிசையாசிரியப்பா |
| 2. இரட்டைப்படை அடிகளால்தானவரவேண்டும், ஒற்றைப் படைஆகாது. |
| இவர் கூறும் இந்த இலக்கணத்துக்கு ஒவ்வாத ஆசிரியப்பாக்களை இவரே இயற்றி உள்ளார். |
| உதாரணம் 1:- |
| ஆளாம் அவருள் அகந்தொறும் கருதிய |
| வண்ணம்நின்று அருளும் மாறில்வான் கருணைப் |
| பெரியோய் ! நின்திருப் பெய்கழற் பரவும் |
| தமிய னேன்றனைத் தக்கார் அல்லார் |
| தாமும் இகழ்வது தவிரமுன் நின்று |
| விழைவெலாம் உதவி, மெய்ப்புகழ் சூட்டிச் |
| செங்கதிர் வெண்கதிர்ச் சீரொளி தழைக்கும் |
| உலகெலாம் உணர உன்னுடன் கலந்துபின் |
| என்அணி குறிப்பார்க்கு யான்எனத் தோன்றி |
| அவர்விருப்பு அனைத்தும் அளித்தருள் இனிதே,1 |
| இது எதுகைத்தொடை பெறாத ஆசிரியப்பா, |
| உதாரணம் 2:- |
| குருவென உலகில் குலவல் எலாம்நின் |
| திருவுரு என்னத் தெளிதரப் பெற்றும் |
| புலைநெறிக் கொடியோர் புன்மை நாடி |
| மலைவுறும் கொடுமை மாற்றி யருளாய்; |
| தண்புனற் பணையில் தயங்கும் வாளை |
| விண்புகின் உரிஞ்சி விரிபூ உதிர்தரு |
| கொன்பொழில் உடுக்கும் குமார புரியில் |
| நம்புநர் வேண்டுவன நல்கி |
| அம்புவி புரக்கும் அயிற்கைவா னவனே.2 |
|