நூற்பா |
2. அடி வரையறை இல்லை, |
நேரிசையாசிரியப்பா |
2. இரட்டைப்படை அடிகளால்தானவரவேண்டும், ஒற்றைப் படைஆகாது. |
இவர் கூறும் இந்த இலக்கணத்துக்கு ஒவ்வாத ஆசிரியப்பாக்களை இவரே இயற்றி உள்ளார். |
உதாரணம் 1:- |
ஆளாம் அவருள் அகந்தொறும் கருதிய |
வண்ணம்நின்று அருளும் மாறில்வான் கருணைப் |
பெரியோய் ! நின்திருப் பெய்கழற் பரவும் |
தமிய னேன்றனைத் தக்கார் அல்லார் |
தாமும் இகழ்வது தவிரமுன் நின்று |
விழைவெலாம் உதவி, மெய்ப்புகழ் சூட்டிச் |
செங்கதிர் வெண்கதிர்ச் சீரொளி தழைக்கும் |
உலகெலாம் உணர உன்னுடன் கலந்துபின் |
என்அணி குறிப்பார்க்கு யான்எனத் தோன்றி |
அவர்விருப்பு அனைத்தும் அளித்தருள் இனிதே,1 |
இது எதுகைத்தொடை பெறாத ஆசிரியப்பா, |
உதாரணம் 2:- |
குருவென உலகில் குலவல் எலாம்நின் |
திருவுரு என்னத் தெளிதரப் பெற்றும் |
புலைநெறிக் கொடியோர் புன்மை நாடி |
மலைவுறும் கொடுமை மாற்றி யருளாய்; |
தண்புனற் பணையில் தயங்கும் வாளை |
விண்புகின் உரிஞ்சி விரிபூ உதிர்தரு |
கொன்பொழில் உடுக்கும் குமார புரியில் |
நம்புநர் வேண்டுவன நல்கி |
அம்புவி புரக்கும் அயிற்கைவா னவனே.2 |
|