பக்கம் எண் :
 
சாத்துகவிகள்546
இந்நூலாசிரியர் மாணாக்கரில் ஒருவர் ஆகிய
திரு. சித்திரப்புத்திர பிள்ளையவர்கள் பாடியன.
நேரிசை வெண்பா
ஆறு திசையும் அணிமுகமாக் கொண்டவனைத்
தேறுமவர் எல்லாம் தினந்தினமும் - மீறும்அன்பால்
வந்தனம் செய்து மகிழ்கூறும் வண்மையினது
இந்த இலக்கணநூ லே.
நேரிசை ஆசிரியப்பா
பூவுல கினரும் புனைந்து போற்றும்
  சேவடிக் குமரன் திருவருள் அதனால்
  நெல்லைமா நகரில் ஓர் நிமித்தத்து உதித்துத்
  தொல்லைஊழ் வினையைத் தொலைத்துத் தூய
  சிந்தையர் மகிழும் சீரொடு விளங்கிச்
  செந்தமிழ்ச் சுவையால் தெவ்வரும் புகழப்
  பெற்றுஉயர் பெரியயோர் பேரவை இடத்தும்
  கற்றவர் அவையினும் கண்மணி எனத்திகழ்ந்து
  அன்பரை வெறுக்கா ஆர்அமுது ஆகி
  இன்பமே உயிர்கட்கு இயற்றி எங்களை
(10)
  ஆண்டசற் குருபரன் ஆகித் தீயவை
  மாண்டுஅறம் நிலைபெற மாதவம் புரியும்
  முருக தாசனும், முத்தமிழ்ப் புலவனும்,.
  திருவுரு வாளனும், திருப்புகழ்க் காரனும்,
  தண்ட பாணியும், சமரசப் புனிதனும்,
  கொண்டல்போல் வழங்கும் கோலா கலனும்
  ஆனவன்; மற்றும் அளப்பறு பேர்புனை
  ஞான வாரிதி நறுந்தமிழ்க்கு உரிய
  எழுத்து சொல்பொருள் யாப்புஅணி புலமை
  வழுத்திய ஆறு வகைஇலக் கணமும்,
(20)
 திருப்புகழ்ப் பனுவலும் செந்தமிழ்ப் புலவோர்
 விருப்புறு வண்ண விதங்களும் பொருநை
 மாநதி உருமா மலைப்பெரும் கோயில்
 தூநகை இருவர்தம் தோள்புணர்ந்து உவக்கும்
 முருக வேள்திரு முன்பின் முதிர்சீர்
 அருள்வலித் துணைக்கொண்டு அரங்கேற் றினனே.