| அண்ணல் அபர அருண கிரிஎனா | | நண்ணி வாழும் நலம்பல உள்ளான்; | | தொண்ட னேனையும் சுதந்தரித்து ஆண்ட | | தண்ட பாணிஎன் சாமி தானே. |
|
|
முதல் பதிப்பில்மட்டும் காணப்படும் சாத்துகவிகள் |
சோழவந்தானூர் அருளானந்த சுவாமிகள் ஆதீனம் ஸ்ரீமத் கந்தசாமி சுவாமிகள் அருளிச்செய்தன |
விருத்தங்கள் |
| இருட்கடல்ஆழ்ந்து அயர்உயிர்கட்கு இறைவன்அறு | | வகைக்கரணம் ஈந்த தேபோல் | | பொருள் கடல்ஆர்ந் துள்ளஅறு வகைஇயலைப் | | புவிஉணரப் புனைதல் செய்தான்; | | அருட்கடல்ஆர்ந்து அம்புவியைச் சுகப்படுத்தும் | | பெருநினைவுஒன்று அகத்தில் பூண்ட | | தெருட்கடலாம் திருப்புகழோன் திருநெல்லைப் | | பதியில்வரும் சிறப்புஉள் ளோனே. |
|
| கூறுபடும் அகச்சமயக் குழப்பமொடு | | புறச்சமயக் குதர்க்கம் நீத்தோன்; | | ஊறுதவிர் பொதுத்திறம்தான் முழுப்புகழ்தோய் | | தனிக்கதிஎன்று உறுதி கொண்டோன்; | | வீறுஉதவு குகக்கடவுள் விளக்கமுழுது | | உணர்நிபுணன் விரும்பி னோர்க்குஎன்று | | ஆறுவகை இலக்கணநூல் அருளியதுஓர் | | வியப்போநல் அறிவுள் ளோரே. |
|
(குறிப்பு: பிற்சேர்க்கை 1இல் உள்ள அகவலைஅடுத்து இவ்விரு விருத்தங்களும் முதல் பதிப்பில் இடம்பெற்றுள்ளன), |