| | போற்றுமின் ! புலவீர் ! போற்றுமின் புலவீர் ! |
| | போற்றுமின் ! இந்நூற் புகழினைப் போற்றுமின் ! |
| | ஏற்றரும் பெரியோர் இறும்பூது எய்தச் |
| | சாற்றிய இந்நூல் தன்மையைப் போற்றுமின் ! |
| | முகத்தல் செய்யா முந்நீர் உண்ட |
| | அகத்திய னாரும் அருந்தமிழ்க் குரவனும் |
| | ஒல்காச் சொற்சுவை ஓங்கச் செய்த |
| | தொல்காப் பியன்ஆம் தூய்மை யாளனும் |
| | அறைந்த இலக்கணம் ஐவகை தம்முள் |
| | மறைந்தன குறைந்தன மாநிலத்து இந்நாட்கு (10) |
| | இன்றி யமையாது இருக்க வேண்டுந |
| | ஒன்றிய அறிவால் ஊகித்து உணர்ந்தே |
| | உறும்இயல் பலவாய் உற்றசூத் திரத்தால் |
| | அறுவகை இலக்கணம் அருளிச்செய்தனன்; |
| | ஆழா அரிய அநேக விதிநிறீஇ |
| | ஏழாம் இலக்கணம் எனவும்ஒன்று இயம்பினன்; |
| | எல்லைஇல் மகிமை இனிதுஅங்கு எழூஉம் |
| | நெல்லைப் பதிஆம் நீள்படை வீட்டினன்; |
| | நீதிசேர் ஞானம் நிகழும் மனத்தினன்; |
| | பூதி நிறைந்து பொலியும் மேனியன்; (20) |
| | புண்புழு ஆதியும் புண்படச் சகியான்; |
| | அன்பே உருவாய் அமைந்த பொற்பினன்; |
| | பண்அமை திருப்புகழ்ப் பாக்கள் தமக்கு |
| | வண்ணத் தியல்பு வகுத்த பெரியோன்; |
| | வேற்படைப் பெருமான் வியன்அருள் பெறீஇ |
| | நாற்கவிப் பாவலர் நடுக்கம் கொள்ளச் |
| | சிந்தையில் சிறிதும் கருதல் இன்றிச் |
| | சந்தக் கவிசொலும் சரபம் ஆனோன்; |
| | அறுமுகக் கடவுள் ஆறு முகம்என |
| | அறுவகைச் சமயமும் ஆதரித் திடுவோன்; (30) |