பக்கம் எண் :
 
சாத்துகவிகள்548
குறுமுனி மிகப்பரவு குகனும்அ யனைத்தழுவு
   குலஅன மும்மெச்சுபுகழ் குலவுநடம் நீடவே
 அறுவகை இலக்கணமொ டெழுவகை இலக்கணமும்
   அருளிஉ வகைக்கடலில் அமிழ்முருக தாசனே.
இந்நூலாசிரியர் மாணாக்கர்
கழுகுமலை வித்துவான் இராமகிருஷ்ணபிள்ளை அவர்கள்
இயற்றியது
ஐந்தாய் அரன்முகங்கள் ஆகமுனிக் கோன்இசைத்தான்
கொந்தார் கடம்பன் குளிர்முகமாத் - தந்தான்
அறுவகைஇ லக்கணநூல் அம்முனிதாட்கு அன்பு
பெரும்உரிமை யால்நம் பிரான்.
தந்தத்தனத்ததன தனனதன தத்ததன,.,,, தனதானனா
 அன்பர்க்குமுத்திதரு பரசிவனை ஒத்துஇலகு
   தென்றற்பொருப்பில்உறை தமிழ்முனி வளர்த்தருளும்
   அன்றுஎட்டுவித்தைவரும் ஒருவலிய சித்தனைவெல்
வழிவீறுதோய்
 அந்தப்படிப்பில்உயர் ஞமலிவிதி யிற்பழகு
    பின்பற்றுஎழிற்பிறவி எழுவகை கழித்துநவில்
    அந்தத்தில்விட்டகுறை முடிவுற உதித்தபழ
முறைவாய்மையான்
 முன்பக்குவப்புலவர் மகிழ்வொடு வியப்பஅறிவு
    இன்றிச்சிவத்தைமுனம் இகழ்பறி தலைச்சமணர்
    மொய்ம்பைத்துதிக்குநர்சொல் இகல்கெடஎழுத்து
உருவம் முதல்ஈறதுஆம்
 முந்துற்றமெய்ப்புலமை இயல்பொடு சிறப்புஅளவை
    துன்றக்குறித்துஉணர்சண் முகன் அருள்விளக்கம்உற
    முந்தைக்கருத்துஇசையும் அறுவகை இலக்கணநல்
விதிகூறினான்;
 இன்பத்தமிழ்க்கடலும் இணையில்கரு ணைக்கடலும்
   ஒன்றுஎத்தகைப்புகழும் ஒருவடிவு என்பபொருவில்
   எண்சித்திற்முற்குலவு நிலைபெறு கதிக்குஉரிய
தவவாழ்வினான்