பக்கம் எண் :
 
சாத்துகவிகள்550
செயிர்அகன்ற அறுவகைஏ ழாவதுவாம்
    இலக்கணங்கள் தெளிவாய்ச் சொற்றான்;
 உயிர்கள்துயர் ஒழித்துஓம்பும் எழில்தண்ட
   பாணிஎனும் உயர்சீ மானே.
திருவுருமாமலைத் தலத்து வித்துவான்
முத்துவீரக் கவிராயர் அவர்கள் இயற்றியது
ஆசிரியப்பா
திருமலி கமலச் செல்வர்கள் படைக்கும்
 உருமலி உயிர்வாழ் அண்டகோ டிகளும்
 ஆயிரத்து எட்டுஎனும் அண்டம் அனைத்தும்
 காய்இரும் திகிரி உருட்டியே கஞ்சன்
 முன்ஆம் தேவர்கள் முதல்பணி கொண்ட
 மன்ஆம் சூரவன் மாவிரு கூறா
 விழவடி வேல்விடு விமலன் சேந்தன்
 அழல்அவிர் பொறிஆறு ஆகிய செவ்வேள்
 கந்தன் காங்கையன் கடம்பணி தோளன்
 எந்தமது இறைகும ரேசன் மீதினில்
(10)
 சொற்சுவை பொருட்சுவை துலங்கவும் சந்தம்
 பற்பல பகுப்பில் பண்கனிந்து ஒழுகும்
 திருப்புகழ் முதல்ஆம் செந்தமிழ்த் தொகுதியும்
 மருப்பொலி ஆறு வகையிலக் கணமும்
 வண்ணத் தமிழ்க்கு வகைவிவ ரம்சொலும்
 பண்அமை இலக்கணப் பைந்தமிழ் எனவும்
 நாவலர் தமக்கு நலம்பெற மாட்சியால்
 தாவிலா வகையால் சாற்றினன் எழிலார்
 திருநெல் வேலியெனும் சிவபுரத்து அமர்ந்தோன்
 தருஎன வழிபடும் தன்மையர்க்கு அருள்வோன்
(20)
 கடன்மடை திறந்தெனக் கவிக்குஉரை புகல்வோன்
 மடமட எனக்கவி மழைசொரி மேகம்
 புலக்குறும்பு அடக்கிய புனிதன் திரிவித
 மலக்கட்டு அறுக்கும் வகைஉணர் விவேகன்
 இருவகை ஆச்சிரமத்து எம்செந்தி னாயகத்து
 அருமைசேர் புதல்வன் ஆகிய புகழோன்