பக்கம் எண் :
 
சாத்துகவிகள்558
சென்னைநகர் பண்டிதைஸ்ரீமதி ம. மனோன்மணியம்மாள் இயற்றியது
ஓங்குபுகழ் அருணகிரி நாதர்அவ தாரமாய்
      உலகுஅதனில் வந்துஉதித்தே
 ஒருகோடி சந்தம்ஆ னாலும்ஒரு நொடியினில்உ -
      ரைத்துஅருளும் மாட்சிமேவிப்
 பாங்குபெரு சீவகா ருணியம்எங் கணும்உறப்
      பகர்சித்தி நோன்புஉஞற்றிப்
 பயில்தண்ட பாணிமுனி வரன்ஆகும் ஞானமணி
      பலநயமும் இலகஓதும்
 சாங்கம்உறும் அறுவகையொடு ஏழாமி லக்கணம்
      சார்ந்துஒளிர் சிறப்பைஓர்ந்தே
 தமிழ்வலார் யாவரும் வியந்துரைத் திடல்மகிமை
      தான்எனம திக்கவேண்டாம்
 வாங்கரிய எட்டாவ தோடுஒன்ப தாம்அவைவ-
      குத்துஇனிது உரைக்கும்வண்ணம்
 வருங்காலம் ஒன்றுளது சேடன்அநு மன்பரிதி
      வாணிமுத லோர்மெச்சவே
சாத்துகவிகள் முற்றுப்பெற்றன.
இந்நூலுக்குச் சாத்துகவிகள் வழங்கிய புலவர்களின் தொகை - 15
சிறப்புக் கவிகளின் மொத்த எண்ணிக்கை - 28.