| சுந்தரம் பெருகுமுத் தமிழ்வலோர் உவகையில் |
| தோய்ந்துஅளவில் சுகிர்தம்உறவும் |
| சொல்லரிய மறையைநெறி முறைஓதும் வேதியர்கள் |
| சுபசோப னம்சொல்லவும் |
| அந்தரத் தோர்வியப்பு உறவும்மகு டாதிபர்உள் |
| அன்புடன் போற்றிசெயவும் |
| அறுவகைஇ லக்கணப் பனுவல்ஒன்று அன்பருக்கு |
| அருமருந்து எனஉதவினான் |
| கந்தரம் தவழ்சோலை நெல்லைமா நகரினன் |
| கருணையே வடிவம்ஆனோன் |
| கவிவாணர் நெஞ்சம்தி டுக்கிடச் சந்தங்கள் |
| கழறிடுங் கரடகொம்பன் |
| இந்திரன் துயர்கெடச் சூர்வென்ற கந்தவேள் |
| இணையடிவி ரும்பும்இயல்போன் |
| இணையிலா அநுபூதி உறுமுருக தாசன்என்று |
| இலகும்எம் குருநாதனே. |