| சுந்தரம் பெருகுமுத் தமிழ்வலோர் உவகையில் |
| | தோய்ந்துஅளவில் சுகிர்தம்உறவும் |
| | சொல்லரிய மறையைநெறி முறைஓதும் வேதியர்கள் |
| | சுபசோப னம்சொல்லவும் |
| | அந்தரத் தோர்வியப்பு உறவும்மகு டாதிபர்உள் |
| | அன்புடன் போற்றிசெயவும் |
| | அறுவகைஇ லக்கணப் பனுவல்ஒன்று அன்பருக்கு |
| | அருமருந்து எனஉதவினான் |
| | கந்தரம் தவழ்சோலை நெல்லைமா நகரினன் |
| | கருணையே வடிவம்ஆனோன் |
| | கவிவாணர் நெஞ்சம்தி டுக்கிடச் சந்தங்கள் |
| | கழறிடுங் கரடகொம்பன் |
| | இந்திரன் துயர்கெடச் சூர்வென்ற கந்தவேள் |
| | இணையடிவி ரும்பும்இயல்போன் |
| | இணையிலா அநுபூதி உறுமுருக தாசன்என்று |
| | இலகும்எம் குருநாதனே. |