| சுந்தரச் சைவசமை யப்புனிதர் ஆதிநல் |
| தூயர்க்கும் மற்றுஎவர்க்கும் |
| சுகஞான அமுதம்என அறுவகைஇ லக்கணச் |
| சூத்திரம்உ ரைத்துஅருளினான்; |
| பந்தபா சம்சிறிதும் மருவாது திருவருட் |
| பத்தியில்உ யர்ந்தசீலன் |
| பகரரிய சித்திமுத் திகள்உதவும் மாதவப் |
| பணியிற்சி றந்தமேலோன் |
| செந்தமிழ்க் குறுமுனிவர் வாழ்பொதியை தனில்எழுஞ் |
| செம்பொருநை நதியின்மேவும் |
| செழுமலர்ச் சோலைசூழ் திருநெல்லை நகரினில் |
| திகழ்முருக தாசன்மாதோ. |
| சிவனணைந்தபெருமாள் முதலியார் அவர்கள் இயற்றியன |