| செய்ய தமிழால் சிறந்தபா மாலைசெய்யும் | | மெய்யடியார்க்கு எந்நாளும் வேண்டுதுணை - உய்யஅருட் | | பேறு கருதிப் பெறும்முருக தாசன்அருள் | | ஆறு வகையிலக்க ணம். |
|
| சுந்தரநி றைந்திலகு சண்முகக் கடவுளே | | தூயபரம் எனஉரைத்தும் | | சுருதிகட்கு உரியசட் சமயங்க ளிற்பெருகு | | தொண்டருக் கினியதுஆன | | செந்தமிழ்இ லக்கணம்ஓர் ஐந்தும்அவை தரலான | | திருவருட் புலமையொன்றும் | | திகழாறு வகையிலக் கணம்எனவு ரைத்தன்பர் | | சிந்தைமகிழ் வுறஉதவினான் | | சந்தமொரு கோடியா னாலும்தொ டுக்கச்ச- | | லிப்புறாக் கவிஞர்வேந்தன் | | சகலஉயிர் களின்மீதும் நீங்காத கருணைமிகு | | தன்மைபெறு தண்டபாணி* |
|
திருநெல்வேலி அருணாசல முதலியார் அவர்கள் இயற்றியவை |
நேரிசை வெண்பா |
| வேதத்தின் உட்பொருளும் மெய்ஞ்ஞான மும்பெறலாம் | | கோதற்ற செந்தமிழ்ப்பாக் கூறலாம்-போதம் | | பெறுமுருக தாசப் பிரான்அருளிச் செய்த | | அறுவகைஇ லக்கணநூ லால். |
|
| சந்தமுத லாயபா மாலிகைதொ டுத்திடத் | | தக்ககவி வாணருக்கும் | | தன்மைகுடி கொண்டமெய் அடியவர்கள் பாதமே | | தஞ்சம்என வாழ்பவர்க்கும் |
|
|