பக்கம் எண் :
 
சாத்துகவிகள்554
விவரமாய்ச்சொல நாவும்ஆயிரம்வேணுமே இது
 தவிரவும்அநுபூதி வேணதுகாணுமே அட
 சிவசிவாஇது அநுபவத்திலேதோணுமே நன்றாய்
 எவரும்இன்பொடு கருதில்அன்பதுபூணுமே ஐயோ
 ஈனமாய்க்குறை சொல்லவிட்டால்
       மானவேற்படை கொல்லும்அப்பால்
 ஆனதால்துதி செய்யும்இப்போது
       ஆனையைப்பார்க்கவும் வெள்ளெழுத்தோ
(அருண)
கந்தசாமியைச்சிறு மைந்தன்என்று அவுணர்கூடிக்
    கடியநண்ணியதுபோல நண்ணலாமோ நல்லது
  அந்தநாளிலே ராமச்சந்திரனை மனிதன்என்று
    அரக்கன்எண்ணியதுபோல் எண்ணலாமோ யாரும்
  வந்தனைசெயும் ஞானசம்பந்தனைச் சமணர்எல்லாம்
    வாதுபண்ணியதுபோல் பண்ணலாமோ நாமும்
  இந்தமாதவனைக்கண்டு சிந்தைமகிழாமல்அமுது
    இருக்கவிஷத்தைவாரி உண்ணலாமோ யார்க்கும்
  முந்தவேயருள் கும்பமாமுனி வாக்யமே போலும்
    எந்தையாய்இவன் விண்டநூல்வெகு சிலாக்யமேஆகும்
  புந்தியால்இது அறிந்தபேர்பெரும் யோக்யமே வெகு
    அந்தமாக விளங்கும்ஈதுஅதி பாக்யமே அன்பால்
  ஆயரக்கவி யாவதுஇட்சண மேஉரைப்பவர் யாவர் இப்படி)
  நேயம்வைத்திடும்ஈதுஅருட்செயலாயிருப்பதினாலுநிச்சயம்
(அருண)
எண்சீர் விருத்தம்
கஞ்சமலர் முகக்குமரன் சைவம் ஓங்கக்
    கவுணியனாப் புவியில்வந்த தன்மை யேபோல்
 நெஞ்சம்மகிழ்ந்து அருணகிரி நாதன் தானே
    நிகழ்முருக தாசன்என நெல்லை மேவி
 எஞ்சல்இலாத் திருப்புகழ்மற்று எவையும் பாடி
    எழிற்செவிகட்கு அமுதூட்டி யாங்கள் பார்க்க
 அஞ்சுவகை இலக்கணமாய் இருப்பதாலே
    ஆறுவகை இலக்கணங்கள் அருள்செய் தானே