| கந்தசாமியைச்சிறு மைந்தன்என்று அவுணர்கூடிக் |
| | கடியநண்ணியதுபோல நண்ணலாமோ நல்லது |
| | அந்தநாளிலே ராமச்சந்திரனை மனிதன்என்று |
| | அரக்கன்எண்ணியதுபோல் எண்ணலாமோ யாரும் |
| | வந்தனைசெயும் ஞானசம்பந்தனைச் சமணர்எல்லாம் |
| | வாதுபண்ணியதுபோல் பண்ணலாமோ நாமும் |
| | இந்தமாதவனைக்கண்டு சிந்தைமகிழாமல்அமுது |
| | இருக்கவிஷத்தைவாரி உண்ணலாமோ யார்க்கும் |
| | முந்தவேயருள் கும்பமாமுனி வாக்யமே போலும் |
| | எந்தையாய்இவன் விண்டநூல்வெகு சிலாக்யமேஆகும் |
| | புந்தியால்இது அறிந்தபேர்பெரும் யோக்யமே வெகு |
| | அந்தமாக விளங்கும்ஈதுஅதி பாக்யமே அன்பால் |
| | ஆயரக்கவி யாவதுஇட்சண மேஉரைப்பவர் யாவர் இப்படி) |
| | நேயம்வைத்திடும்ஈதுஅருட்செயலாயிருப்பதினாலுநிச்சயம் (அருண) |