பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்553
அநுபல்லவி
அருணஉதயம்போலே கருணைதுலங்கலாலே
  அருமறைபுகழ்பாலன் உருமலைவடிவேலன்
  அருட்குணக்கடலாகிமுந்த அகத்தியர்க்கு அருளேபுரிந்த
  கருத்தினுக்குஇசைவாயுகந்த திருப்புகழ்க்கவிபாடும்அந்த
(அருண)
சரணங்கள்
தொல்லைவினையோ அல்லது என்னதவமோ தொண்டர்
    தொழுநெல்லை நகர்வந்து பிறந்தானே பிறந்து
  அல்லல்உலகவாழ்க்கை எள்ளளவும் ஆகாதுஎன்று
    அறிவாலேசுகர்போலும் துறந்தானே துறந்து
  எல்லையில்லாக்கவிகள் சொல்லியே அறுவகை
    இலக்கணமும்செய்து சிறந்தானே இது
  அல்லாமல்திருப்புகழ் சொன்னது அனந்தம்சைவ
    ஆகமப்பயிர்கட்குஈது அறம்தானே நிந்தை
  சொல்லிவாழ்கிற புல்லருக்குஇடர் நீட்சியே அன்றி
  நல்லஉத்தம வல்லவர்க்குஉயர் காட்சியே ஆகும்
  வெல்லும்வேள்புகழ் சொல்லிவாழ்கிற மாட்சியே பெற்றுச்
  செல்வரைப்புகழாத சீர்ஒரு சாட்சியே நாளும்
  சீதமானகுணாலமாதவன் வாதமேசெயும் வாணர்நேர்வரின்
  நீதியாய்விதிபேசிவாது அறம் ஓதுவான்நிசம் ஆகையால் இவன்
(அருண)
அவளவு இல்லாமற்போனால் கனவினில்முருகன்வந்து
    அருள்வானோஇவன்உண்மைதெருள்வானோதெருண்டு
  எவளவோஉயர்வான திருமலைமீதுஏறி
    இவனைப்போல்ஒருவன்தான் உருள்வானோ உருண்டு
  அவமாய்உயிர்விடாமல் பிழைப்பானோபிழைத்தும்வந்து
    அடிமைத்திறமும்சிலர்க்கு அருள்வானோ அருள்
  இவளவுஇல்லையேயாகில் குதர்க்கவாதம்செய்வோன்
    எவனேனும்எதிர்நிற்க மருள்வானோ இன்னம்