|
உறுப்பியல் - தொடை ஓத்து 201 |
‘ஒருசீர் அடிமுழு தாயின் இரட்டை’.
என்றார் அவிநயனார்.
‘ஒருசீர் அடிமுழுதும் வருவ திரட்டை’.
என்றார் மயேச்சுரர்.
‘அடிமுழு தொருசீர் வரினஃ திரட்டை’.
என்றார் பரிமாணனார்.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
‘ஒக்குமே ஒக்குமே ஒக்குமே ஒக்கும்
விளக்கினிற் சீரெரி ஒக்குமே ஒக்கும்
குளக்கொட்டிப் பூவின் நிறம்’1.
எனவும்
[இன்னிசை வெண்பா]
‘பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ
பாவீற் றிருந்த புலவீர்காள்! பாடுகோ
ஞாயிற் றொளியான் மதிநிழற்றே தொண்டையார்
கோவீற் றிருந்தான் கொடை’12
எனவும்,
[இன்னிசைச் சிந்தியல் வெண்பா]
‘நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணும் சால்பினும்
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்’.
எனவும் இரட்டைத் தொடை ஆமாறு கண்டு கொள்க.
‘இரட்டை, அடி முழுதும் ஒரு சீர்த்து’ என்னாது, ‘ஒருசீர் இயற்றே’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?
[குறள் வெண்பா]
‘குருத்துக் குறைத்துக் கொணர்ந்து நமது
கருப்புச் செறுப்புப் பரப்பு’
எனவும்
1. யா. வி. 53 உரைமேற். 2. நேமிநாதம். பக் 30.
பி - ம். 1 குடை.
|