பக்கம் எண் :
 

 செய்யுள் இயல்                                        365

     வழுவற்ற ஆறிரண்டு வான்றளையால் மாற
     எழுமுப்பத் தாறாம் எனல்’.1

     ‘கொச்சகம் ஈரைந்தும் வெண்கலி ஓரிரண்டும்
     வைத்திசையோர் மூன்றினால் மாறியபின் - மற்றவற்றை
     மாசில் பதினான்கு வான்றளையால் மாறவாம்
     ஆசில்கலிக் கைஞ்ஞூற்று நான்கு’.21

 என்றார் ஆகலின்.

     ‘நான்கு முதலாக நாலைந் தெழுத்தளவும்
     ஆன்ற அகவல் அடிக்கெழுத்தாம் - மூன்றுடைய
     பத்தாதி யாகப் பதிற்றிரட்டி ஈறாக
     வைத்தார் முரற்கைக் கெழுத்து’.3

     ‘ஏதம் தழுவா திசைசேர்ந் திருநான்கு
     நீதி நலஞ்சேர்ந்து நிற்றலால் - ஓதிய
     மூன்றாங் கிடக்கை முறைமை முரற்கைக்கு
     மூன்றாங் குலம்வகுத்தார் முன்’.

 வணிகர்க்கு எண்ணிலமாவன;
     ‘தனிமை ஆற்றல்,? முனிவிலன் ஆதல்,
     இடத்துத் தெருமரல்5 பொழுதொடு புணர்தல்,
     உறுவது தெரிதல், இறுவதஞ் சாமை,
     வகுத்தல், ஈட்டல், வாணிகன் துறையே’.44

 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

[கட்டளைக் கலித்துறை]

     ‘தரவே தரவிணை தாழிசை தாமும் சிலபலவாய்
     மரபே பயின்றும் மயங்கியும் வந்தன வாங்கமைத்தோள்
     அரவேர் அகலல்குல் அம்பேர் நெடுங்கண்வம் பேறுகொங்கைக்
     குரவே கமழ்குழ லாய்! கொண்ட வான்பெயர் கொச்சகமே’.5

 இவ்வியாப்பருங்கலப் புறநடையை விரித்து உரைத்துக் கொள்க.


  1,2 யா. வி. 81 உரைமேற். 3 யா. வி. 74 உரைமேற். 4 திவா. 12 : 126. 5 யா. கா. 33.
  பி - ம். 1 ஆசிகந்த ஐஞ் ஞூற்று ? தனிமையன் ஆதல் 5 இடனறிந் தொழுகல் 4 வகுத்தல் ஈட்டல் என்றிவை எட்டும், வாட்டம் இல்லா வணிகர தியற்குணம்.