பக்கம் எண் :
 

 378                                   யாப்பருங்கல விருத்தி

 வற்றை ‘வஞ்சி மண்டிலத் துறை’ என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது.

     அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

[வஞ்சி நிலைத் தாழிசை]

     ‘இரும்பிடியை இகல்வேழம்
     பெருங்கையால் வெயில்மறைக்கும்
     அருஞ்சுரம் இறந்தார்க்கே
     விரும்புமென் மனனேகாண்;                         1

     ‘மடப்பிடியை மதவேழம்
     தடக்கையால் வெயில்மறைக்கும்
     இடைச்சுரம் இறந்தார்க்கே
     நடக்குமென் மனனேகாண்;                          2

     ‘பேடையை இரும்போத்துத்
     தோகையால் வெயில்மறைக்கும்
     காடகம் இறந்தார்க்கே
     ஓடுமென் மனனேகாண்’.                            3

     இவை ஒரு பொருண்மேல் மூன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால் வஞ்சி நிலைத்தாழிசை.

     வஞ்சி மண்டிலத் தாழிசை வந்த வழிக் கண்டு கொள்க.

[வஞ்சி நிலைத் துறை]

     ‘மார்வுற அணிந்தாலும்
     மார்வுறாய் மணிவடமே!
     தோளுறச் செறித்தாலும்
     தோளுறாய் கிளர்வளையே!’

     இஃது ஒரு பொருண்மேல் ஒன்றாய் அடி மறி ஆகாதே வந்தமையால், வஞ்சி நிலைத் துறை.

[வஞ்சி மண்டிலத் துறை]

     ‘முல்லைவாய் முறுவலித்தன;
     கொல்லைவாய்க் குருந்தீன்றன;
     மல்லல்வான் மழைமுழங்கின;
     செல்வர்தேர் வரவுண்டாம்’.1


  1. யா. வி. 95 உரைமேற்.