பக்கம் எண் :
 

 482                                   யாப்பருங்கல விருத்தி

[குறள் வெண்பா]

     ‘நேர்நேராம் நேரசையும் நேர்பும்; நிரைநேராய்
     ஏனை இரண்டும் எனல்’.

 இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

     ‘தன்சீர் உள்வழித் தளைவகை வேண்டா’.1

 என்றும்; ‘போதுபூ, போரேறு, பூமருது’ இவைகளைப் பாதிரி யாகவும், ‘விறகுதீ, கடியாறு,  மழகளிறு’ இவைகளைக் கணவிரியாகவும், வெண்சீரின் ஈற்றசை நிரைபசையாகவும் இயற்றித்  தொல்காப்பியனாரும் நற்றத்தனாரும் முதலாகிய ஆசிரியர் சொன்ன மதமெல்லாம் வல்லார்வாய்க் கேட்டுக் கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும். ஒழிந்தன  எல்லாம் இந்நூலோடு ஒக்கும்.

[குறள் வெண்பா]

     ‘போதுபூப் போரேறு பூமருதென் றிம்மூன்றும்
     பாதிரியா வைக்கப் படும்’.

 எனவும்,

     ‘ஏனைய மூன்றும் கணவிரியாம் வெண்சீரின்
     ஈறு நிரையாம் எனல்’.

 எனவும் இவற்றைப் பதம் நெகிழ்ந்து உரைத்துக் கொள்க.

     இனி, ஒருசாரார் சொல்லும் கடாவும் விடையும்

[நேரிசை வெண்பா]

     ‘குற்றுகரம் ஒற்றாகக் கொள்ளாதே வெள்ளையான்
     மற்றும் தளைவிரவும் மற்றதனால் - குற்றுகரம்
     ஐந்தா றசைச்சீர் அருகிவரும் வஞ்சிக்கண்
     என்றாற்றான் என்னாம் இழுக்கு?’

 இது கடா.

     ‘அறுத்திசைக்கும் செய்யுட்பால் அன்றுள்ளான் றன்பேர்
     செறிப்பிற் செயிர்வாக்காம் என்னும் - குறிப்பினாற்
     கேடுரைத்தார் கெட்டவரோ பற்றார்க்கும் கேடல்லர்
     நாடறியும் என்பதனால் நன்கு’.

 இது விடை.


  1 தொல். பொ. 367